குடும்பத்தில் அனைவரும் தூக்கிட்டு தற்கொலை! மக்களிடையே பரபரப்பு!

0
119

குடும்பத்தில் அனைவரும் தூக்கிட்டு தற்கொலை! மக்களிடையே பரபரப்பு!

புதுச்சேரி திருபுவனை அருகே உள்ள சண்ணியாசிகுப்பம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 29) என்பவர். இவருடைய மனைவி சந்தியா (வயது 23). இவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். திருமணத்துக்கு பிறகு ஆனந்த் தனது மனைவி மற்றும் தாயார் அன்னக்கிளி ஆகியோருடன் சன்னியாசி குப்பத்தில் வசிந்து வந்துள்ளார்.

குடும்பத்தில் மாமியார் மருமகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது ஆனந்த் அவர்களை சமாதானம் படுத்தியதாக தெரியவந்துள்ளது. இதனால் மன உடச்சலுக்கு ஆளான சந்தியா செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வீட்டில் உள்ள ஒரு அறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து ஆனந்த் காலை எழுந்து பார்த்தபோது மனைவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவரும் அதே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் ஓடிவந்து அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மருமகள் இறந்த தூக்கம் தாங்க முடியாமலும் தன் மகன் தற்கொலை முயன்றதாலும் மனமுடைந்து போன அன்னக்கிளி சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய உறவினர்கள் அன்னக்கிளி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.

இதைக் குறித்து திருவபுனை போலீசார் மாமியார், மருமகள் என 2 பேர் உடல்களை மீட்டு உடல் கூறாய்வுக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
CineDesk