தேவர் தங்க கவச விவகாரம்! உரிமையை பெறுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிரடி வியூகம்!

0
114

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நிகழ்வு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி நடைபெறுகிறது .அந்த நாளில் தென் மாவட்டங்களில் இருக்கின்ற தேவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவது வழக்கம்.

கடலூர் 2014 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு 13 கிலோ எடை கொண்ட தங்க கிரீடம் மற்றும் கவசத்தை வழங்கினார்.

சுமார் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கவசம் மதுரை பேங்க் ஆப் இந்தியா வங்கியின் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் தேவர் ஜெயந்தி நிகழ்வு வரும்போது அதிமுகவின் பொருளாளராக இருப்பவர் வங்கியில் இருந்து கலசத்தை எடுத்து கமுதியில் இருக்கின்ற தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் வழங்கி நிகழ்வு முடிவடைந்த பிறகு மறுபடியும் வங்கியில் வைக்கப்படுவது வழக்கமான நடைமுறை.

இப்படியான நிலையில் இந்த வருடம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையின் தங்க கவசத்தை பெறுவதில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இடையே போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், இருதரப்பும் தங்க கவசத்திற்கு உரிமை கூறி மதுரையில் கவசம் பாதுகாக்கப்பட்டு வரும் தனியார் வங்கியில் முக்கியமான பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

அதோடு கவசத்தை பெறுவதற்கு தேவர் நினைவிட அறங்காவலர் காந்தி மீனாவின் ஒப்புதலும் அவசியம் என்று சொல்லப்படுகிறது. ஆகவே அவருடைய ஆதரவை பெறுவதற்காக திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நத்தம் விஸ்வநாதன், ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா உள்ளிட்ட தென் மாவட்ட நிர்வாகிகள் இன்று பசும்பொன் செல்கிறார்கள்.

அங்கே நினைவிட அறங்காவலர் நேரில் சந்தித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்ற நிலையில், அவர் சம்மதம் தெரிவித்தால், தங்க கவசத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு வழங்குவதற்கு வங்கி நிர்வாகம் முன் வரலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.