நடிகைகளிடம் அமலாக்கத் துறை விசாரணை! சார்மி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நேரில் ஆஜர்!

0
100
Enforcement department investigates actresses! Charmi and Rahul Preet Singh in person!
Enforcement department investigates actresses! Charmi and Rahul Preet Singh in person!

நடிகைகளிடம் அமலாக்கத் துறை விசாரணை! சார்மி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நேரில் ஆஜர்!

பாலிவுட்டில் ஒரு நடிகர் தற்கொலை செய்து கொண்டதன் காரணமாக நடிகர் மற்றும் நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக பல்வேறு புகார்கள் வருவதன் காரணமாக தெலுங்கு திரை உலகிலும் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக பல புகார்கள் வந்தது. அதை அடுத்து தெலுங்கானா போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2017 ஆம் ஆண்டு சோதனைகளை மேற்கொண்டனர்.

அப்போது பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய் 30 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து 12 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த சம்பவத்தில் பிரபல டைரக்டர் பூரி ஜெகன்நாத், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே.நாயுடு, நடிகர்கள் தருண், நவ்தீப், ரவிதேஜா, மற்றும் நடிகைகள் சார்மி கவுர், முமைத்கான் உட்பட 12 பேருக்கு போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பு உள்ளதாக தெரியவந்தது.

இந்த வழக்கில் மொத்தம் 62 பேரிடம் விசாரணை நடைபெற்றது. மொத்தம் இதற்காக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் இதில் பல கோடி ரூபாய் ஹவாலா பணம் கைமாறி இருக்கலாம் என அமலாக்கத் துறை போலீசார் சந்தேகப்படுகிறது. எனவே ஒவ்வொருவரிடமும் தனி தனியாக விசாரணை மேற்கொண்டனர். இதில் கருப்பு பணம் வெள்ளை ஆக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதைத் தொடர்ந்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

இந்நிலையில் 12 சினிமா பிரபலங்களுக்கு அமலாக்கத் துறை தற்போது சம்மன் அனுப்பியுள்ளது. அதில் முக்கியமாக ரகுல் பிரீத் சிங், ராணா, ரவிதேஜா, இயக்குனர் பூரி ஜெகன்னாத், நடிகை சார்மி உள்ளிட்ட பலருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை சார்மி அமலாக்கத்துறை முன்பு நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டனர். அதேபோல் நடிகை ராகுல் பிரீத் சிங் இன்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார்.