விபத்து நேரத்தில் லாக் செய்துள்ள போனிலிருந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிப்பது எப்படி?

0
68

ஒவ்வொருவரும் தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் மொபைலில் லாக் செய்திருப்பார்கள். அப்படி உள்ளவர்கள் விபத்தில் சிக்கும் போது அவர்களுடைய உறவினர்களை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

இந்நிலையில் இப்படி பாஸ்வேர்டு போட்டு போனை லாக் செய்து வைத்திருப்பவர்கள் கீழ்கண்டவாறு செய்தால் அவசர நேரத்தில் அவர்களது உறவினர்களுக்கு சுலபமாக தகவல் தெரிவிக்கலாம்.

Phone இல் பாஸ்வோர்ட் போட்டு வைத்திருப்பவர்கள் இதற்காக கட்டாயமாக செய்ய வேண்டியவை.

இதன் மூலமாக போன் லாக் செய்திருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் விபத்தில் சிக்கி இருக்கும் போது அவர்களது போனிலிருந்து பெற்றோர்,உறவினர் அல்லது நண்பர்களுக்கு அதே போனிலிருந்து சுலபமாக தகவல் தெரிவிக்கலாம்.

இதற்காக உங்கள் போனில் உள்ள contact -ல் group என்ற option இருக்கும் அதை open செய்து அதில் ICE Emergency Contact -ல் உங்கள் பெற்றோர் சகோதரர் நண்பர்கள் உள்ளிட்டோரின் நெருக்கமானவர்களின் எண்களை சேவ் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

அவசர தேவையின் போது உங்கள் போன் லாக்கில் இருக்கும்போது, Lock -ன் கீழே Emergency Calls ஐ கிளிக் செய்தால் நீங்கள் சேவ் செய்து வைத்திருக்கும் எண்கள்
வரும். அந்த எண்ணிற்கு அந்த போனிலிருந்து கால் செய்ய முடியும்.

இதை தெரிந்து வைப்பதுடன் உங்கள் போனிலும் இதை போல பதிவு செய்து வையுங்கள் ஆபத்து காலங்களில் நமக்கு பேருதவியாக இருக்கும்.

author avatar
Pavithra