மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு பணமா! மின்துறை கடுமையான எச்சரிக்கை!

0
98

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் இருக்கின்றன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மண்வாரியம் அறிவித்திருக்கிறது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றன. இந்த நிலையில், மின்வாரிய அதிகாரிகளுக்கு மின்வாரியம் சில எச்சரிக்கைகளை விடுத்திருக்கிறது.

இது குறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவின் அடிப்படையில் அதிகாரிகளுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த சுற்றறிக்கையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை செய்யும் போது பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிறப்பு முகாமுக்கு வருகை தரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

அதேபோல கணினியில் கோளாறு உண்டானால் மாற்று ஏற்பாடாக கணினிகளை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. காலையில் 10:30 மணி முதல் மாலை 5.15 மணி வரையில் இடைவெளி இல்லாமல் பணிபுரிய வேண்டும் என்றும் மின்வாரியம் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.