144 தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை முதல்வர் எச்சரிக்கை

0
58

144 தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை முதல்வர் எச்சரிக்கை

தமிழகத்தில் தடை உத்தரவை யாரேனும் மீறினால் அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடிப் பழனிச்சாமி அவர்கள் எச்சரித்துள்ளார்.

வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வேலைக்காகச் சுமார் லட்சம் பேர் வநனதுள்ளனர். அவர்கள் அனைவரும் முகாமில் பாதுகாப்பாகத் தங்கியுள்ளனர். இன்று அவர்களிருக்கும் முகாமை ஆய்வு செய்தபின் முதல்வர் கூறியதாவது நேற்றுப் பிரதமருடன் நடந்த ஆலோசனையில் வெளிமாநிலத்தவருக்கு உணவு உடை இடம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறினார்.

மேலும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மக்கள் தேவை இல்லாமல் வெளியே வரத் தொடங்கியுளனர் இது முற்றிலும் தவறான ஒன்றாகும். அது மட்டுமில்லாமல் பல இடங்களில் சமூக விலகலைக் கடைப்பிடிப்பதில்லை. இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே அனைவரும் தடை உத்தரவை மதித்து நடக்க வேண்டும் இல்லையேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அவர்கள் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K