சசிகலாவிற்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி அடுத்தடுத்து எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள்! ஷாக்கான சசிகலா தரப்பு!

0
106

அதிமுகவில் சசிகலாவிற்கு இனி எப்பொழுதும் இடம் கிடையாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததன் மூலம் முதல்வர் ஒரு நிலையான முடிவை டெல்லி பயணத்தின்போது எடுத்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது.

சென்ற 2017 ஆம் வருடம் சசிகலா சிறைக்கு போவதற்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர் என்று அறிவித்துவிட்டு சிறைக்குச் சென்றார் அதன் பிறகு உருவான அரசியல் மாற்றங்களால், அதிமுக அமைச்சர்கள் பல பேர் சசிகலாவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள். ஆனாலும் ஒரு தடவை கூட சசிகலாவிற்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது கிடையாது என தெரிவிக்கிறார்கள் .சொல்லப்போனால் சசிகலாவின் பெயரைக் கூட இதுவரையில் எடப்பாடி பழனிசாமி எங்கும் உச்சரித்து கிடையாது என்று சொல்கிறார்கள். ஆனாலும் ஒரு இடத்தில் மட்டுமே சின்னம்மா என் தெரிவித்து டிடிவி தினகரனை விமர்சனம் செய்திருக்கிறார் .அதைத் தவிர கடந்த 4 ஆண்டுகளில் சசிகலாவிற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையிலும் எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படையாக ஈடுபடவில்லை என்று சொல்கிறார்கள்.

இதுபோன்ற சூழ்நிலையில் தான் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வரும் சசிகலா அதிமுகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று சிலர் பேசிக் கொள்ளத்தொடங்கியிருக்கிறார்கள். சசிகலா தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி சென்ற நான்கு வருடங்களில் ஒரு மெல்லிய போக்கை மட்டுமே கடைபிடித்து வருகிறார். இதன் காரணமாக சசிகலா விடுதலை ஆனப்பின்னர் சசிகலாவுடன் முதல்வர் இணைந்து விடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. அதோடு சட்டசபைத் தேர்தலில் திமுகவை எதிர்கொள்வதற்கு சசிகலாவை அதிமுகவில் இணைத்துக் கொள்ளலாம் என்று டில்லியில் இருக்கின்ற ஒரு சிலர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அறிவுரை தெரிவிப்பதாகவும் தெரிகின்றது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரு தின அரசு முறை பயணமாக டெல்லிக்குப் போனார். அங்கே அமித்ஷாவுடன் சுமார் ஒன்றரை மணி நேரம் அவர் சந்திப்பை நிகழ்த்தியிருக்கிறார். அப்போது சசிகலாவின் விடுதலை தொடர்பான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது .சசிகலா நான்கு வருடங்கள் சிறையில் இருந்த நேரத்தில் அதிமுகவை திறமையாக வழி நடத்த இருப்பதாகவும் சசிகலா விடுதலை ஆவதால் கட்சியின் ஒரு சிறிய சலசலப்பு கூட ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் உள்துறை அமைச்சரிடம் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலாவை கட்சியில் இணைத்துக் கொள்வது கட்சிக்கு தேர்தல் நேரத்தில் பின்னடைவை உண்டாக்கும் எனவும் பேச்சுகள் அதுக்கு நடந்திருக்கின்றன.

அமித்ஷா சசிகலா விவகாரத்தில் பெரிய அளவில் ஆர்வத்தை எடுத்துக்கொள்ளவில்லை என்று சொல்கிறார்கள். சிறையிலிருந்து விடுதலையாகி சசிகலாவிற்கு ஆளும் தரப்பின் மூலமாக மீண்டும் ஒரு வாய்ப்பை ஏன் கொடுக்கவேண்டும் விதத்தில் அமித்ஷா எடப்பாடி இடம் உரையாற்றியதாக சொல்லுகிறார்கள். பிரதமர் மோடியை சந்தித்த நேரத்திலும் பாஜக மற்றும் தேமுதிக பாமக போன்ற கட்சிகளுடன் அதிமுக கூட்டணி மிகவும் வலுவாக இருப்பதாக சொல்லி இருக்கின்றார். அதேபோல சென்ற வருடம் நடந்த இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியை போல சட்டசபை தேர்தலிலும் அதிமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெறும் என்று மோடியிடம் தெரிவித்ததாக தெரிகிறது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் உடனான சந்திப்பு நிகழ்ந்த சமயத்தில் சசிகலா குறித்து பெரிய அளவில் பேசவில்லையாம். செய்தியாளர் சந்திப்பின்போது சசிகலாவிற்கு அதிமுகவில் மீண்டும் 100 சதவீதம் இதுதான் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அதோடு கட்சியில் இப்பொழுது சசிகலா ஆதரவு சட்டசபை உறுப்பினரோ அல்லது சாதாரண அடிப்படை உறுப்பினரோ ஒரே ஒருவர் கூட இல்லை என்று தெரிவித்திருக்கிறார். அவர் இவ்வாறு தெரிவித்தது அனைவரையும் யோசிக்க வைத்திருக்கிறது. சென்ற நான்கு வருடங்களில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூட எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவின் பெயரை தெரிவிக்கவில்லை என்று சொல்கிறார்கள். அவர் என்றுதான் குறிப்பிட்டு சசிகலா தொடர்பாக உரையாற்றியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

அதோடு நின்று விடாமல், சசிகலா விடுதலையாகும் ஜனவரி மாதம் 27ஆம் தேதி ஜெயலலிதாவின் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதன்மூலமாக சசிகலாவின் விடுதலையில் ஊடகங்கள் பெரிய அளவில் கவனம் செலுத்த இயலாத நிலையை அவர் உண்டாக்கி இருப்பதாக சொல்கிறார்கள். அதோடு நிகழ்ச்சியில் உரையாற்றும் நேரத்தில் சசிகலாவிற்கு எதிராக ஒரு சில விஷயங்களை உரையாற்றி அவர் சிறையில் இருந்து வெளியே வரும் நேரத்தில் ஊடகங்கள் சசிகலாவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்ப்பதற்கும் திட்டம் தயாராகி வருவதாக சொல்கிறார்கள்.