தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

0
72

அண்மையில் புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த புதிய கல்விக் கொள்கையில் கல்வியில் 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு,”மும்மொழி கொள்கை” அறிமுகம் “சமஸ்கிருதம்” அனைத்து பள்ளி மற்றும் உயர் படிப்புகளில் விருப்பப்பாடமாக சேர்க்கப்பட்டு ஊக்குவிக்கப்படும் போன்ற பல்வேறு தகவல் கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து தமிழகத்தில் உள்ள திமுக,பாமக,நாதக,தேமுதிக,பாஜக,காங்கிரஸ் போன்ற பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பும்,ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில்

புதிய கல்வி கொள்கை குறித்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் “மும்மொழி கொள்கை” இடம்பெற்றிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.மத்திய அரசு அந்தந்த மாநிலத்தின் கொள்கைக்கு ஏற்ப செயல்பட பரிசீலனை செய்யவேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரை மும்மொழிக் கொள்கையை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் “இருமொழி கொள்கை” யைதான் பின்பற்றுவோம்,தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை தமிழக அரசு உடனடியாக களைய நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் எடப்பாடி பயனிசாமி கூறியுள்ளார்.

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

author avatar
Parthipan K