40 ஆண்டுகளாக கண்ணாடியை சாப்பிடுறேன் சுவையோ பிரமாதம்!!!

0
79

40 ஆண்டுகளாக கண்ணாடியை சாப்பிடுறேன் சுவையோ பிரமாதம்!!!

மத்தியபிரதேசத்தில் உள்ள டிண்டோரியில் ஒரு மனிதர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்புகள்,மதுபான பாட்டில்கள் மற்றும் பிற பொருட்களின் கண்ணாடிகளை சாப்பிட்டு வருகிறார். அவர் தான் தயாராம் சாஹூ என்ற வக்கீல். இவர் குழந்தை பருவத்திலிருந்தே கண்ணாடிகளை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்.

“நான் வித்தியாசமாக எதாவது செய்ய விரும்பினேன் ,அதனால் நான் இதைத் தொடங்கினேன்.நான் முதலில் சாப்பிட்டபோது எனக்கு ஒரு நல்ல சுவை ஏற்பட்டது.நான் கண்ணாடிகளை சாப்பிடுவது தெரிந்த மக்கள் திடுக்கிட்டு அதை கண்டார்கள். அதனால் நான் அதை கண்பிப்பதற்காக மேலும் தொடர்ந்து சாப்பிட்டேன்” என்று திரு சாஹூ செய்தியாளர்களிடம் கூறினார்

“மக்கள் சிகரெட்,மதுபானம் மற்றும் பிற விஷயங்களுக்கு அடிமையாக இருப்பது போல இது எனக்கு ஒரு போதை”என்று அவர் கூறினார்.

அவரது இந்த விசித்திரமான பழக்கம் அவரது பற்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியது என்றும்.மற்றபடி எந்த பிரச்சனையும் உணரவில்லை எனவும் கூறினார். ஆனால் மருத்துவர்கள் ஒரு பெரிய கண்ணாடி வயிற்றில் சென்றால், அது என் குடலுக்கு தீங்கு விளைவிக்கும் என கூறினர்.எனவே நான் அந்த பழக்கத்தை கட்டுபடுத்தினேன்,எப்போதாவது சாப்பிடுவேன்” என்று அவர் கூறினார்.

உடல்நலத்திற்கு ஆபத்தானது என்பதால் மற்றவர்களைப் பின்பற்ற நான் பரிந்துரைக்க மாட்டேன்” என்று வழக்கறிஞர் சொல்கிறார்.மக்கள் யாரும் கண்ணாடி சாப்பிட முயற்சிக்க கூடாது என்றும் இது உடலின் உட்புற பாகங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்தார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K