இதை 5 நாட்கள் மட்டும் சாப்பிடுங்கள்!! மாதவிடாய் பிரச்சனை நீங்கி அடுத்த மாதமே கருத்தரிக்கலாம்!!

0
103
#image_title

இதை 5 நாட்கள் மட்டும் சாப்பிடுங்கள்!! மாதவிடாய் பிரச்சனை நீங்கி அடுத்த மாதமே கருத்தரிக்கலாம்!!

 

இந்த காலத்தில் பெரும்பாலும் திருமணம் ஆன தம்பதியினருக்கு இருக்கும் கவலைகளுள் முக்கியமான ஒன்று குழந்தை பாக்கியம் இல்லாதது தான். இதற்கு உணவு பழக்க வழக்கம், உடல்நிலை, வாழ்கைமுறை போன்று பல காரணங்கள் சொல்லலாம்.

 

மாதவிடாய் கோளாறுகள் இருந்தாலும் கருதரித்தலில் பிரச்சனைகள் வரும். அந்த மாதவிடாய் கோளாறுகளை நீக்கி கருத்தரிக்க சில இயற்கையான வைத்திய முறைகள் உள்ளது. அந்த வைத்தியமுறைகள பற்றி பார்க்கலாம்.

 

வைத்திய முறை ஒன்று :

 

அரை லிட்டர் பசும்பால் எடுத்துக் கொள்ளவும். அந்த பாலில் கால் கிலோ மலைப் பூண்டை உரித்து போட்டு வேக வைக்க வேண்டும். இதை நன்கு கலந்துகொண்டே இருக்க வேண்டும். அல்வா பதத்திற்கு வந்த பிறகு இதில் கற்கண்டு அல்லது பனங்கற்கண்டு சேர்த்து இறக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

 

இந்த மருந்தை மாதவிடாய் நாட்களில் இருந்து ஒரு வாரத்திற்கு தொடர்ந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 

வைத்திய முறை 2:

 

பச்சை மஞ்சளை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். மலை வேம்பு சாறு எடுத்துக் கொள்ளவும். நல்லெண்ணெய் எடுத்துக் கொள்ளவும். மூன்றையும் சமமான அளவு எடுத்துக் கொண்டு மூன்றையும் ஒன்று சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். இதை சூடாக்கத் தேவையில்லை.

 

இதை மாதவிடாய் நாட்களான முதல் மூன்று நாட்களில் காலை, மாலை என இரண்டு வேலையும் தலா ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும். இந்த வைத்திய முறை நிறைய பெண்களுக்கு பலன் தந்திருக்கின்றது.

 

வைத்திய முறை மூன்று :

 

பெண்களுக்கு உடலில் ஊளைச் சதை இருந்தாலும் கரு உண்டாவதில் பிரச்சனை ஏற்படும். தினமும் ஐந்து முதல் பத்து சின்ன வெங்காயத்தை எடுத்து பச்சையாக சாப்பிட்டால் உடலில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் பருமன் குறையும். கரு உண்டாவதில் ஏற்படும் பிரச்சனைகளும் தீரும். விரைவில் வீட்டில் குழந்தை சத்தம் கேட்கும்.