கர்ப்பப்பை நீர்க்கட்டி கரைய இதனை 3 நாள் சாப்பிடுங்கள்!! 100% குழந்தை பேரு நிச்சயம்!!

0
243
#image_title

கர்ப்பப்பை நீர்க்கட்டி கரைய இதனை 3 நாள் சாப்பிடுங்கள்!! 100% குழந்தை பேரு நிச்சயம்!!

பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை நீர்கட்டிகளை எளிமையான முறையில் எவ்வாறு கரைத்து வெளியேற்றுவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 

பெண்களுக்கு ஏற்படக் கூடிய இந்த கர்ப்பப்பை நீர்கட்டிகளை PCOD அல்லது PCOS என்று கூறுவர். இந்த கர்ப்பப்பை நீர்கட்டியும் மாதவிடாய் பிரச்சனையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. இந்த கர்ப்பப்பை நீர்க் கட்டிகளை எளிமையான மருத்துவ முறையில் எவ்வாறு கரைப்பது என்று தெரிந்து கொள்ளலாம்.

 

பெண்களுக்கு இந்த கர்ப்பப்பை நீர்க் கட்டி பிரச்சனை எவ்வாறு வருகிறது என்றால் பெண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் ஏற்றத் தாழ்வுகள் தான் காரணம். இதற்கு முக்கிய காரணம் வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் தான்.

 

இதன் அறிகுறிகள்…

 

* கர்ப்பப்பை நீர்க் கட்டிகள் உள்ள பெண்களுக்கு சரியான முறையில் மதவிடாய் சுழற்சி இருக்காது.

 

* கர்ப்பப்பை நீர்கட்டிகள் உள்ள பெண்களுக்கு முகத்தில் முடி வளரும். முடி கொட்டும். குரல் மாறும்.

 

* இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு பொதுவாக உடல் எடை அதிகரிக்கும்.

 

இந்த பிரச்சனைகள் பெண்களுக்கு கருதறித்தல் நேரத்தில் பல விளைவுகளை ஏற்படுத்தும். குழந்தையின்மை பிரச்சனையை ஏற்படுத்தும். இதனை எவ்வாறு சரி செய்வது என பார்க்கலாம்.

 

* கர்ப்பப்பை நீர்க் கட்டி பிரச்சனை உள்ளவர்கள் முளைகட்டிய தானியங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தட்டாம் பயிறை அடிக்கடி உணவில் சேய்த்துக் கொள்ள வேண்டும். தட்டாம் பயிறு கர்ப்பப்பைக்கு அதிக சத்துக்களையும் பலத்தையும் கொடுக்கின்றது.

 

* கர்ப்பப்பை நீர்க் கட்டி பிரச்சனை உள்ள பெண்கள் மலை வேம்பை அதிக அளவு எடுத்துக் கொள்ளலாம். இந்த மலை வேம்பை பெண்கள் மாதத்திற்கு மூன்று முறை பயன்படுத்தும் பொழுது கர்ப்பப்பை நீர்க் கட்டிகளுக்கு நல்ல தீர்வை கொடுக்கும்.

 

* இந்த மருந்துகளை எடுக்கும் பொழுது சில உணவுகளை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொறித்த உணவுகள், மைதா, பிராய்லர் கோழி, துரித உணவுகள் இதை எல்லாம் பெண்கள் சாப்பிடாமல் மருந்து எடுத்து வந்தால் மருந்துகளின் முழுப் பயனும் கிடைக்கும்.

 

* மலை வேம்பு கிடைக்காவிட்டால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மலை வேம்பு இலைப் பொடி கூட பயன்படுத்தலாம்.

 

* மலை வேம்பு இலைகள் கிடைப்பவர்களுக்கு ஒரு கைப்படி அளவு மலை வேம்பு இலைகளை எடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியான பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த மலை வேம்பு இலை பேஸ்டை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

 

* மலை வேம்பு இலைப் பொடி வைத்திருப்பவர்கள் இந்த மலை வேம்பு இலை பொடி ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து அப்படியே குடிக்கலாம்.

 

* பொதுவாக இந்த நீர்க் கட்டிகள் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் தான் ஏற்படும். அதனால் இந்த மலை வேம்பை மாதவிடாய் காலங்களில் முதல் மூன்று நாட்களில் எடுத்துக் கொண்டால் நீர்க்கட்டி ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.

 

இந்த மலை வேம்பை பெண்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மட்டும் எடுத்து வர வேண்டும். மூன்று நாட்களுக்கு மேல் எடுக்கக்கூடாது. தொடர்ந்து வெறும் மூன்றே நாட்கள் எடுத்து வந்தால் நீர்க் கட்டிகள் கரைந்து வெளியேறத் தெடங்கும். கருத்தறித்தலில் இருக்கும் பிரச்சனை சரியாகும். குழந்தையின்மை பிரச்சனைக்கு தீய்வு கிடைக்கும்.