சேலத்தில் முன்விரோதம் காரணமாக வாலிபரை மர்மகும்பல் சரமாரி வெட்டி சாய்த்தனர்!!

0
131
#image_title

முன்விரோதம் காரணமாக இளைஞருக்கு கத்திகுத்து!! மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு!!

சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் உதயசங்கர் வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வந்தார். சேலம் மூன்றோடு பகுதியில் உள்ள விவசாய விற்பனை கூட்டுறவு வங்கி அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் உதய்சங்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மூன்றுபேர் கொண்ட மர்மகும்பல் வீச் அருவாளால் உதயசங்கரை வெட்ட முயன்றபோது, உதயசங்கர் இரண்டு சக்கர வாகனத்தை எடுத்து தப்பிக்க முயற்சி செய்தார். அப்போது மர்மகும்பல் விரட்டி சென்று உதய்சங்கரின் தலை,வயிறு,கை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்து சென்றனர்.

இதனிடையில் ரத்தவெள்ளத்தில் கிடந்த உதய்சங்கரை அப்பகுதி மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து மாநகரத் துணை ஆணையாளர் கௌதம் கோயல் தலைமையான காவல்துறையினர் அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து பள்ளப்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓமலூர் பகுதியில் வெள்ளிக்கட்டி விவகாரத்தில் உதய்சங்கர் பணமோசடி செய்த வழக்கில் சிறைக்குச் சென்று வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதனால் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.வாலிபர் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

author avatar
Savitha