பதினெட்டாம் நாள் சபதம் முடித்தாளா திரௌபதி? இயக்குனர் மோகனின் அதிர்ச்சியூட்டும் பதிவுகள்

0
175

பதினெட்டாம் நாள் சபதம் முடித்தாளா திரௌபதி? இயக்குனர் மோகனின் அதிர்ச்சியூட்டும் பதிவுகள்

மகாபாரதத்தில் பதினெட்டாம் போர் என்பது மிகவும் சிறப்புக்குறிய பகுதியாக பார்க்கப்படும் இது குருசேத்திரப்போர் என்றும் அழைக்கப்படுவது உண்டு. இப்போரின் இறுதிநாளில் கௌரவர்களின் கடைசி தளபதியான சல்லியனை கொன்றதன் மூலம் 99 கௌரவர்களும் அழிந்து பாண்டவர்களின் சபதம் நிறைவேரும். இவை அனைத்துமே திரௌபதியின் சபத்ததாலே சாத்தியமாகும்.

இதைப் போலவே திரௌபதி என்ற தலைப்பிலே தமிழகத்தில் முதல் கூட்டுமுயற்சி படமாக இயக்குனர் மோகன் அவர்களின் இயக்கித்தில் வெளிவந்தது. இத்திரைப்படம் தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று 2020 ஆண்டின் முதல் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

இதுவரை தமிழ்சினிமாவில் காதலை எதிர்க்கும் பெற்றோர்களை வில்லன்கள் போலவும் அவர்களே காதலிக்கும் இளைஞர்களுக்கு எதிரிகளாகவும் சித்தரித்து தவறான கருத்தை இளைஞர்களிடம் விதைத்துவந்த நிலையில், திரௌபதி திரைப்படமானது இந்த தவறான கருத்தை உடைத்து எரிந்து தியேட்டர்களில் வசூலை அள்ளியதோடு மட்டுமல்லாமல் நீண்ட காலமாக குடும்பத்தோடு ஒரு படம் பார்க்கமாட்டோமா என்ற பல குடும்பங்களின் ஏக்கத்தை போக்கி குடும்பம் குடும்பமாக குறிப்பாக தங்களது பெண் பிள்ளைகளோடு பார்த்த ஒரு படமாகவும் அமைந்தது.

கொரோனோ வைரஸ் தொற்றை தடுக்க நேற்றைய தினம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அனைத்து தியேட்டர்களும் மூட உத்தரவிட்டுருந்தார். அதனையடுத்து தற்போது வரை வெற்றிகரமாக சமூகத்தில் ஒரு மாற்றத்தை திரௌபதி திரைப்படம் ஏற்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் இவ்வாறான அறிவிப்பு பலரையும் சற்றே வருத்தப்பட செய்தது.

இது குறித்து திரௌபதி திரைப்பட இயக்குனர் மோகன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: மாகாபாரதத்தில் வரும் திரௌபதி பதினெட்டுநாள் போரில் கயவர்களை அழித்தால். திரௌபதி திரைப்படம் வெளியாகி சரியாக பதினெட்டு நாள் கழித்து இவ்வாறான அறிவிப்பு வருவது என்பது உள்ளபடியே என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. திரௌபதி தான் வந்த வேலையை சரியாக பதினெட்டு நாட்களில் முடித்து விட்டாள் என்றே தோன்றுகிறது.

மேலும் தான் அடுத்த படத்திற்கான வேலையை ஆரம்பிக்க உள்ளாதால் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் இனி கலந்துகொள்ள இயலாது என்றும், இந்த திரைப்படத்திற்கு ஆதரவு அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி என்றும் தெரிவித்திருந்தார

author avatar
Parthipan K