படிக்கும் வயதில் காதலித்து கர்ப்பமான மாணவி! நாடக காதலன் மூலம் உடன்பிறந்த சகோதரியை கொன்ற கொலைகார புள்ளீங்கோ.!!

0
138

படிக்கும் வயதில் காதலித்து கர்ப்பமான மாணவி! நாடக காதலன் மூலம் உடன்பிறந்த சகோதரியை கொன்ற கொலைகார புள்ளீங்கோ.!!

காதலுக்கு இடையூறாக இருந்த சகோதரியை நாடக காதலன் மூலம் கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய 12 ஆம் வகுப்பு பள்ளிக்கூட மாணவி கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியைச் சேர்ந்த சந்திரன்-வத்சலா தம்பதிக்கு மணிகண்டன் என்ற மகனும் 2 மகள்களும் உள்ளனர். மூத்தமகள் மோனிஷா கல்லூரியில் முதலாம் ஆண்டு, இளையமகள் 12 ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24 ஆம் தேதி மோனிஷா கையில் அறுபட்டு ரத்த வெள்ளத்தில் வீட்டில் கிடந்ததாக அவரது தங்கை குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து மோனிஷாவை உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் மோனிஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மோனிஷாவின் இறப்பு தற்கொலைதான் என்று குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நம்பிய நிலையில் மோனிஷாவின் அண்ணன் மணிகண்டன் தனது தங்கையில் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் உடனடி விசாரணை நடத்த வேண்டுமென்று நாமக்கல் காவல் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை புகார் அளித்திருந்தார். இதனையடுத்து தற்கொலை வழக்கில் இருந்து சந்தேகத்திற்கான மரண வழக்காக மாற்றப்பட்டு தீவிர விசாரணை தொடர்ந்தது.

முதலில் மணிகண்டன் குடும்பத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மோனிஷா இறந்த அன்று தங்கள் வீட்டு மாடியில் இருந்து அதே பகுதியைச் சேர்ந்த ராகுல் என்பவர் வேகமாக ஓடியதாக மோனிஷாவின் தாயார் கூறினார். ராகுலைப் பிடித்து போலீசார் பக்குவமான விசாரணை நடத்தியதில் மோனிஷாவின் தங்கையின் பெயர் வெளியானது. இதையடுத்து அவரிடம் பிடித்து விசாரணை நடத்தியபோது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

கல்லூரி மாணவர் ராகுலும் 12 ஆம் வகுப்பு மாணவியான மோனிஷாவின் தங்கையும் கடந்த நான்கு வருடங்களாக ஆர்வகோளாறில் பாலியல் உணர்ச்சிக்கு அடிமையாகி காதலித்து வந்துள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராகுல் மோனிஷாவின் தங்கையுடன் கசமுசா போன்ற வயதுக்கு மீறிய எல்லையில் ஈடுபட்டுள்ளார். பாலியல் உணர்ச்சிக்கு அடிமையான தங்கையின் தவறான செயலை மோனிஷா கண்டித்ததோடு அவரது குடும்பத்தினரும் கண்டித்துள்ளனர்.

இதனிடையே படிக்கும் வயதில் மோகத்தில் விழுந்த மாணவி ராகுலின் ஆசைக்கு இணங்கியதால் கர்ப்பமாகியுள்ளார். இதனை மோனிஷா தனது காட்டிக் கொடுத்ததாக சொல்லப்பட்டுகிறது. இதனை வஞ்சகமாக வைத்து மோனிஷா தூங்கிக் கொண்டிருந்த போது காதலன் ராகுலின் உதவியுடன் மோனிஷாவை கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் தற்கொலை போன்று இருக்கவேண்டும் என்பதால் மோனிஷாவின் கையில் அறுத்துவிட்டு தப்பியோடிதாக தனது வாக்குமூலத்தில் ராகுல் கூறியுள்ளான்.

இதையடுத்து நாடக காதலன் ராகுலையும் அவரால் கர்ப்பமான 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவியையும் போலீசார் கைது செய்தனர். சமீப காலங்களாக பள்ளிக்கு செல்லும் மாணவிகள் காதல் என்கிற வலையில் விழுந்து கர்ப்பமாவதும் இதனால் அவர்களின் குடும்பத்தில் கொலை சம்பவம் மற்றும் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. படிக்கும் வயதில் உடன் பிறந்த சகோதரியையே கொலை செய்ய தூண்டியது அறியாமையால் வந்த காதலே காரணம் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் காதல் என்கிற பெயரில் சுற்றி வரும் நாடக காதல் கும்பலைப் பற்றி தமிழ் சினிமாக்கள் பேசத் தொடங்கியிருந்தாலும் மாணவிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்றே பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

author avatar
Jayachandiran