PMK மரு.இராமதாஸ் முத்து விழாவை முன்னிட்டு பசுமை தாயகம் சார்பாக மரக்கன்று நடும் விழா சென்னையில்!

0
112

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் விழாவை பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர். பிறந்த நாளை முன்னிட்டு இலவச வேட்டி சேலை மற்றும் மரக்கன்று நடுதல் போன்றவை செய்தனர்.

இதை தொடர்ந்து இன்று மருத்துவர் இராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு மற்றும் பசுமை தாயகம் ,சமூக முன்னேற்ற சங்கம் இணைந்து விழா ஒன்றை நடத்தியது. அதற்கு அன்புமணி ராமதாஸ் மனைவி திருமதி சௌமியா அன்புமணி அவர்கள் தலைமை தாங்கி நட்தினார்.

சமூக முன்னேற்ற சங்கம் சென்னை மாவட்டம் சார்பில் மருத்துவர் அய்யா முத்து விழாவை முன்னிட்டு பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாராட்டு விழா இன்று நடைபெற்றது,
விழாவில் பசுமைத்தாயகத்தின் தலைவர் மரியாதைக்குரிய சௌமியாஅன்புமணி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி சிறப்பு செய்தனர் .

விழாவில் ஆற்றல் மிக்க மாநில தலைவர் பேராசிரியர் ச. சிவப்பிரகாசம் பொதுச்செயலாளர் ஆசிரியர் சி. ஏழுமலை பசுமைத்தாயகம் செயலாளர் அண்ணார் அருள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் பசுமை தாயகம் சார்பாக மரக்கன்று நடுதல் நடைபெற்றது.
சமூக முன்னேற்ற சங்கத்தின் மாநில பொது செயலாளர் சி.ஏழுமலை அவர்கள் மாணவர்கள் முன்னே கூறியதாவது, மாணவர்கள் தமிழ் சமுதாயத்தின் எதிர் காலம் எனவும், ஐயா அப்துல் கலாம் சொல்வது போல நாட்டின் பெரும் சக்தி மாணவ செல்வங்கள் என கூறினார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K