பொங்கல் பரிசு வாங்க விருப்பம் இல்லையா? உங்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

0
99
Don't want to buy Pongal gifts? Important information released by the government to you!
Don't want to buy Pongal gifts? Important information released by the government to you!

பொங்கல் பரிசு வாங்க விருப்பம் இல்லையா? உங்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

நடப்பாண்டில் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளில் தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பொங்கல் பரிசான 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.ஆனால் அதில் இருந்த பொருட்கள் தரமற்றதாக இருந்தது என பல்வேறு தரப்பில் இருந்து குற்றாச்சாட்டு எழுந்து வந்தது.

அதனால் நடப்பாண்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அப்போது அந்த கூட்டத்தில் ரூ 1000 ரொக்க பணம், பச்சரிசி,சர்க்கரை போன்றவை பொங்கல் பரிசாக வழங்க முடிவு செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து கரும்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனால் அந்த கோரிக்கையை ஏற்ற அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறும் என அறிவித்து. மேலும் நேற்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு பெற டோக்கன் விநியோகம் தொடங்கி உள்ளது.

இந்நிலையில் பொங்கல் பரிசு பணத்தை வாங்க விரும்பாத ரேஷன் அட்டைதாரர்கள் அந்த பணத்தை அரசுக்கு விட்டுக்கொடுக்கும் விதமாக www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் சென்று உரிமம் விட்டுக்கொடுத்தல் என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும்.அதனை அடுத்து நீங்கள் வாங்க விரும்பாத பொருட்களை பதிவிட்டு சமர்பிக்க வேண்டும்.இதன் மூலம் கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பபடும் தொகுப்பு குறைக்கப்படும்.இவ்வாறு செய்வதன் மூலமாக ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க முடியும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K