திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய நாய் விற்பனையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

0
98
#image_title

திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய நாய் விற்பனையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய, நாய் விற்பனையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை போரூரை சேர்ந்த ஆனந்த பத்மநாபன் என்பவர் நாய்களை வாங்கிவிற்கும் பணியையும் செய்துவந்துள்ளார். அதற்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப்பில் குழுவுல் அசோக் நகரை சேர்ந்த இளம்பெண்ணுடன் பழகியுள்ளார்.

2019ல் ஏற்பட்ட நட்பு காதலாக மாறிய நிலையில், திருமணம் செய்வதாக கூறிய வார்த்தைகளை நம்பி, மனமொத்து பலமுறை தனிமையில் இருந்துள்ளனர்.

பின்னர் திருமணம் செய்யாமல் ஏமாற்றியதால் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் மைலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை அல்லிக்குளம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.ஹெச்.முகமதுபாரூக் விசாரித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட ஆனந்த பத்மநாபன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

author avatar
Savitha