ரஷியாவின் கொரோனா தடுப்பூசி இந்த சக்தியதான் அளிக்கிறதா?

0
72
ரஷியா கண்டுபிடித்திருக்கும் கொரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக்-5 பாதுகாப்பானது என்றும் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்பதும் முதல் இரண்டு கட்ட ஆய்வின் முடிவில் தெரியவந்து இருப்பதாக மருத்துவ இதழான தி லான்செட் தெரிவித்துள்ளது. ஆய்வில் பங்கேற்ற 76 பேருக்கும் கோவிட்-19 வைரசுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தின் மூலம் உருவான நோய் எதிர்ப்பு சக்தியானது கொரோனாவில் இருந்து இயற்கையாகவே மீண்ட பிறகு மக்கள் கொண்டிருந்த நோயெதிர்ப்பு சக்தியை ஒத்திருந்தது என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயெதிர்ப்பு மண்டலத்தின் மற்றொரு அங்கமான டி-செல்கள் உருவாக்கத்தையும் ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர். இந்த தடுப்பு மருந்து 28 நாட்களில் டி-செல்களை உருவாக்குகிறது என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. புதிதாக பதிவு செய்யப்பட்ட தடுப்பூசி பாட்டில்கள் கொண்ட புகைப்படத்தை ரஷ்ய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
author avatar
Parthipan K