அரசின் மிரட்டலால் பணிந்த மருத்துவர்கள்! பணிக்கு திரும்பி வருவதாக தகவல்

0
78

அரசின் மிரட்டலால் பணிந்த மருத்துவர்கள்! பணிக்கு திரும்பி வருவதாக தகவல்

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவர்கள் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரும் அவதிகள் இருப்பதால் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு தீவிரமாக உள்ளது

இந்த நிலையில் நேற்று மாலை அரசு மருத்துவர் சங்கப் பிரதிநிதிகளும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வேலைநிறுத்தம் தொடரும் என மருத்துவர்கள் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது

இதனையடுத்து பேட்டி அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் ’மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது தவறு என்றும் ஒரு சில சங்க உறுப்பினர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர ஒப்புக்கொண்டாலும் ஒருசில சங்கத்தினர் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் பிரேக் இன் சர்க்கிஸ் முறையில் பணிக்கு வராத மருத்துவர்களுக்கு பதிலாக புதிய மருத்துவர்கள் நியமனம் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்

அதேபோல் இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் ’மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவ்வாறு திரும்பாத மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களுக்கு பதிலாக புதிய மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் முதல்வரின் மிரட்டலை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 4683 மருத்துவர்களில் ஆயிரத்து 1550 பேர் இன்று பணிக்கு திரும்பி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் சற்றுமுன் அளித்த பேட்டியில் ’போராட்டம் செய்தவர்களை தண்டிப்பது அரசின் நோக்கமல்ல என்றும் அரசு மென்மையான போக்கை கடைபிடித்து வருவதாகவும் அரசின் வேண்டுகோளை ஏற்று பணிக்குத் திரும்பிய 1550 பேருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்

மேலும் நோயாளிகளின் நலன் கருதி பணிக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்தோம் என்றும் நேற்று 4683 மருத்துவர்கள் பணிக்கு வராத நிலையில் இன்று 3177 மருத்துவர்கள் மட்டும் பணிக்கு வரவில்லை என்றும் அவர்களும் இன்று மாலை அல்லது இரவு பணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்

இந்த நிலையில் மருத்துவர்கள் போராட்டம் அனேகமாக இன்று இரவு அல்லது நாளைக்குள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

author avatar
CineDesk