நல்ல செய்தி மக்களே – இந்த மருந்து கொரோனா வராமல் தடுக்கிறதாம்!

0
64

கொரோனா நோய் பரவலைத் தடுக்க பல முயற்சிகளை அரசு முன்னெடுத்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் Arsenicum Album 30C எனும் ஹோமியோபதி மருந்தை ஆயுஷ் அமைச்சகம் நோய் எதிர்ப்பு சக்திக்கு பயன்படுத்தலாம் என பரிந்துரைக்க, தமிழக அரசு அந்த மருந்தை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த மருந்தை பயன்படுத்துபவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், Arsenicum Album 30C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சிறந்த முறையில் செயல்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து ஹோமியோபதி மருத்துவர் மோனலிஸா ஜான் கூறுகையில் “உலக அளவில் ஹோமியோபதி மருத்துவம் இரண்டாம் இடத்தில் உள்ளது. நோய்த் தொற்று பாதிப்பு அதிகம் இருக்கும் இடங்களில் ஆய்வு செய்யும்போது Arsenicum Album 30C மருந்தை உட்கொண்டவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படவில்லை என ஆதாரப்பூர்வமாக மருத்துவ ஆய்வுகள் உள்ளது. எனவே கட்டாயம் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளலாம்” என்றார்.

இது குறித்து ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் தலைவர் ஞானசம்பந்தம் ” Arsenicum Album 30C, மத்திய மாநில அரசால் அங்கீகாரம் பெற்ற மருந்து என்பதால் யார் வேண்டுமானாலும் இந்த மருந்தை உட்கொள்ளலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த பயமும் இல்லாமல் எடுத்துக்கொள்ளலாம். மூன்று நாட்களுக்கு தினமும் 4 மாத்திரை சாப்பிட்டால் எந்த பக்கவிளைவும் இல்லாமல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்” என தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K