உங்களுக்கு இன்சுலின் 30 நிமிடத்தில் சுரக்க வேண்டுமா? வீட்டில் உள்ள இந்த 2  பொருள் போதும்!  

0
156
#image_title

உங்களுக்கு இன்சுலின் 30 நிமிடத்தில் சுரக்க வேண்டுமா? வீட்டில் உள்ள இந்த 2  பொருள் போதும்!  

இன்சுலினை அரை மணி நேரத்தில் சுரக்க வைக்க இந்த வழியை பின்பற்றினால் போதும். 30 நிமிடத்தில் இன்சுலின் சுரக்க இதை செய்தாலே போதுமானது.

இன்சுலின் கணையத்தில் சுரக்கக்கூடிய மிக முக்கியமான ஹார்மோன். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. இந்த இன்சுலின் குறைவாகவோ அல்லது சுரக்காமல் போனாலும் குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல முடியாது. இதனால் அளவுக்கு அதிகமான சர்க்கரை ரத்தத்தில் தங்கி கொடிய நோயான சர்க்கரை வியாதி ஏற்படுகிறது.

இதனால் இவர்கள் இன்சுலின் அளவை அதிகரிக்க ஊசி போட்டுக் கொள்வார்கள். இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் நிற்கும். நாம் தற்போது நிரந்தரமாக இன்சுலின் சுரக்க செய்வதற்கு அற்புதமான ஒரு வைத்திய முறையை பார்ப்போம்.

*** இதற்கு நாம் எடுத்துக் கொள்ளப் போகும் பொருள் சின்ன வெங்காயம். 5 முதல் 8 சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

*** அடுத்து இதில் இரண்டு ஸ்பூன் வெல்லம் தூளாக்கி சேர்த்துக் கொள்ளவும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வெள்ளை சர்க்கரை சாப்பிடக் கூடாது. ஆனால் பனங்கற்கண்டு, வெல்லம் நாட்டுச்சர்க்கரை எடுத்துக் கொள்ளலாம்.

*** வெங்காயத்தை தனியாக சாப்பிட முடியாது. அதற்காக வெல்லம் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். சின்ன வெங்காயத்தில் ஒரு விதமான காரத்தன்மை இருப்பதால் வெல்லம் சேர்த்து சாப்பிடும்போது அது குறைந்து விடும்.

*** உங்களுக்கு வெல்லம் சேர்ப்பது பிடிக்கவில்லை எனில் சாப்பாட்டுடன் சேர்த்து சின்ன வெங்காயத்தை எடுத்துக் கொள்ளலாம். அல்லது காலையில் பழைய சோறு சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை கடித்துக் கொள்ளலாம். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் மற்றும் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும்.

*** ஒரு பத்து நாட்களுக்கு சின்ன வெங்காயம் மற்றும் வெல்லம் சேர்ந்த கலவையை எடுத்துக் கொண்டு வரும்பொழுது உங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் நிற்பதை பார்க்கலாம். இன்சுலின் அளவும் அதிகரித்திருக்கும்.

*** மேலும் இதை சாப்பிட்டு வரும் பொழுது நரம்பு தளர்ச்சி, கை கால் நடுக்கம் போன்றவற்றை சரி செய்யும். ஏதாவது ஒரு வகையில் சின்ன வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டு வருவதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.