செரிமானபிரச்சனை வயிற்றுப்பொருமல் தலைவலி மலச்சிக்கல் குணமாக நல்ல தூக்கம் வர வேண்டுமா? இந்தப் பொருளை தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்!! 

0
175
#image_title

செரிமானபிரச்சனை வயிற்றுப்பொருமல் தலைவலி மலச்சிக்கல் குணமாக நல்ல தூக்கம் வர வேண்டுமா? இந்தப் பொருளை தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்!! 

தண்ணீரில் ஒரு முக்கால் ஸ்பூன் இந்த பொருளை கலந்து கொதிக்க வைத்து குடித்தால் போதும். செரிமான பிரச்சனை, வயிற்றுப் பொருமல், வாயு பிரச்சனை, வயிற்று வலி,  மலச்சிக்கல் இவை குணமாகும். மேலும் நல்ல நிம்மதியான தூக்கமும் கிடைப்பதோடு  தலைவலியும் நீங்கும். நன்றாக பசி எடுக்கும்.

** அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அடுத்ததாக அதில் முக்கால் ஸ்பூன் அளவு ஓமம் சேர்க்கவும். நன்றாக கொதிக்க வேண்டும். இரண்டு டம்ளர் தண்ணீர் ஆனது ஒரு டம்ளர் தண்ணீராக மாறும் வரை கொதிக்க விடவும்.

** இதை வடிகட்டி உப்பு சேர்த்து பருகலாம். இதை காலை அல்லது இரவு வேளைகளில் குடிக்கலாம். சிறிய குழந்தைகள் இரண்டு ஸ்பூன் அளவும், பெரியவர்கள் அரை டம்ளர் அளவும் குடிக்கலாம். இதை குடிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்.

** சிலருக்கு பேசும் பொழுது மிகவும் அதிகமான வாய் துர்நாற்றம் ஏற்படும். அவர்கள் இந்த தண்ணீரில் தினமும் காலை, இரவு என இருவேளை வாய் கொப்பளித்து வர அந்த துர்நாற்றம் அறவே நீங்கும்.