திமுக கையெழுத்து இயக்க போராட்டத்தில் இளைஞர் சரமாரி கேள்வி; பதில் தெரியாத உடன்பிறப்புகள் எஸ்கேப்..!!

0
55

திமுக கையெழுத்து இயக்க போராட்டத்தில் இளைஞர் சரமாரி கேள்வி; பதில் தெரியாத உடன்பிறப்புகள் எஸ்கேப்..!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் 2 கோடிக்கும் மேற்பட்ட பொது மக்களிடம் கையெழுத்தை வாங்கி வித்தியாசமான போராட்டத்தை முன்வைத்தார். இந்த போராட்டம் சம்பந்தமாக சில தினங்களுக்கு முன்பு சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கையெழுத்து வாங்க திமுக மகளிர் பல இடங்களில் மக்களிடம் கையெழுத்து வாங்கினர்.

திமுக மகளிர் தொண்டர், ஒரு இளைஞரை அழைத்து கையெழுத்து போடும்படி கூறினார். அருகில் வந்த இளைஞர் எதற்காக கையெழுத்து வாங்குறிங்க..? என்ன காரணம்..? சரியான விளக்கம் தரமுடியுமா என்று சரமாரியாக கேள்விகளை தொடுத்தார். இதை சற்றும் எதிர்பாராத திமுக பெண் தொண்டர்கள் விழிபிதுங்கி நின்றனர்.

பின்னர், மோடி அரசினால் ஏற்படுக்கு நஷ்டத்திற்கு எதிராக கையெழுத்து வாங்குவதாக சமாளித்தனர். அந்த இளைஞர் மீண்டும் விடாமல் கேள்விகேட்டதால், நீ கையெழுத்து போடவே வேண்டாம் போ” என்று கூறினர். நீங்கள்தானே கூப்பிட்டிங்க கேள்விகேட்டால் பதில் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம் என்று இளைஞர் மீண்டும் கேள்வியெழுப்பவே… திமுகவின் மற்றொரு தொண்டரை விளக்கம் தர அழைத்தனர்.

அழைக்கப்பட்ட உடன்பிறப்புக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி தெரியவில்லை என்பதால் அவரும் பதில் சொல்ல முடியாமல் முழித்தார். இதைப்பார்த்த கேள்விகேட்ட இளைஞர் புண்முறுவலுடன் சிரிக்க ஆரம்பித்தார். கடைசியாக நாங்கள் டெல்லிக்கு சென்று பேசுவோம் என்று ஏதோ ஒரு வகையில் சமாளித்து கேள்வி கேட்ட இளைஞரிடம் இருந்து திமுக தொண்டர்கள் எஸ்கேப் ஆயினர். இதேபோல் திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் பொதுமக்களை வழிமறித்து கட்டாயமாக கையெழுத்து வாங்கியதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் பிரியாணி போட்டு பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கியதாக புகார் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

author avatar
Jayachandiran