திராவிட இயக்கத்தின் நிரந்தர தளபதி நான் தான்! தன்னை தானே புகழ்ந்து கொண்ட மு.க.ஸ்டாலின்.

0
81

தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 111வது பிறந்த நாளையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் மதிமுகவின் மாநில மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான திரு மு.க ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

தமிழ் தமிழர் பெரியார் அண்ணா கலைஞர் இவர்கள் அனைவரும் ஒரே பெயரில் அழைக்கப்படுகிறார்கள் என்றும், தமிழ் மொழியை அழிக்கும் நோக்கில் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும்,
தமிழகத்தில் மொழி,இனத்தை காப்பதற்கு திராவிட முன்னேற்ற கழகம் அரணாக இருப்பதாகவும் கூறினார்.

திராவிட இயக்கத்தின் நிரந்தர தளபதி நான் எப்படியோ அதே போல் திராவிட இயக்கத்தின் நிரந்தர போர்வாள் எனவும் கூட்டத்தில் தன்னை பற்றி பெருமையாக பேசினார்.

இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். கடந்த காலங்களில் திமுகவை மிகக்கடுமையாக தரம் தாழ்ந்து பேசி வந்த வைகோவை மிகவும் புகழ்ந்து தள்ளி பேசினார். அவர் ஆரோக்கியமாக இருந்தால்தான் திராவிடம் செய்யும் எனவும் பாதுகாக்கப்படும் எனவும் வைகோவை மெய்சிலிர்க்க வைக்கும் அளவிற்கு திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் பேச்சு இருந்தது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K