தருமபுரி எம்பி செந்தில்குமார் நாடாளுமன்ற உறுப்பினரா? நாலாந்தர அரசியல்வாதியா? ட்விட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

0
131
DMK MP Dr Senthil Kumar Criticise Ma Foi K. Pandiarajan-News4 Tamil Latest Online Tamil News Today
DMK MP Dr Senthil Kumar Criticise Ma Foi K. Pandiarajan-News4 Tamil Latest Online Tamil News Today

தருமபுரி எம்பி செந்தில்குமார் நாடாளுமன்ற உறுப்பினரா? நாலாந்தர அரசியல்வாதியா? ட்விட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பாக தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் செந்தில்குமார் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கிறேன் என்ற பெயரில் சில பதிவுகளை போடுவதும் அதை மாற்று கட்சியினர் விமர்சனம் செய்வதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. இவ்வாறு அரசியல் ரீதியாக விமர்சனம் செய்யும் நபர்களுக்கு பதிலளிக்க முடியாமல் அவர்களை பிளாக் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதிகமாக பிளாக் செய்த அரசியல் தலைவர்கள் பட்டியலில் இவருக்கு முக்கிய இடம் கிடைக்கும் என்றும் பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.

அரசியல் விளம்பரத்திற்காக ஆரம்பித்த இவரது ட்விட்டர் பதிவுகள் நாளடைவில் தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதையும் மறந்து ஒரு நாலாந்தர அரசியல்வாதியை போல பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ட்விட்டர் பதிவில் விமர்சனம் செய்து விளம்பரம் தேடிக் கொள்வது வரை வந்தது. அரசியலில் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் அவருக்கு எதிரான விமர்சனங்கள் நிச்சயமாக இருக்கும் ஆனால் அது ஒரு தலைவரின் பதிவில் போய் பின்னூட்டம் இடும் அளவிற்கு கீழ் தரமாக இருக்க வாய்ப்பில்லை.

ஒரு அரசியல் தலைவரின் கருத்து குறித்தோ அல்லது அவரை பற்றியோ விமர்சனம் செய்ய வேண்டுமென்றால் தனியாக ஒரு அறிக்கை அல்லது ட்விட்டர் பதிவுகளாக வெளியிடலாம். ஆனால் தருமபுரி எம்பி செந்தில்குமார் தொடர்ந்து பாமக நிறுவனரின் ட்விட்டர் பதிவுளில் விமர்சனம் செய்து தனக்கான விளம்பரத்தை தேடி கொண்டிருந்தார்.

இந்நிலையில் தான் பாமக இணையதள தொண்டர்கள் தருமபுரி பகுதியில் செந்தில்குமார் எம்பியின் குடும்பம் வன்னியர் சங்க சொத்தை அபகரித்து விட்டதாக குற்றசாட்டை வைத்தனர். இதனையடுத்து பாமக நிர்வாகிகளும் இந்த குற்றசாட்டு குறித்து ஊடகங்களுக்கு முறையான விளக்கமளித்தனர். இதனால் பதறி போன திமுக தலைமை கொஞ்ச காலம் எம்பியை அமைதியாக இருக்க கட்டளையிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து கொஞ்ச காலம் அமைதியாக இருந்த செந்தில்குமார் எம்பி மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆளும் கட்சியை சார்ந்த தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரான மாஃபா பாண்டியராஜன் தொடர்ந்து திமுகவை கடுமையாக விமர்சித்தும் பேசி வரும் நிலையில், சமீபத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார். ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை என்றும் பாலியல் குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட்டார் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இவரை விமர்சனம் செய்யும் வகையில் டாக்டர் செந்தில்குமார் எம்பி ட்விட்டரில் பதிவிட்ட கருத்து தற்போது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது. அவரை நம்பி வாக்களித்த தொண்டர்களே அவரும் ஒரு நாலாந்தர அரசியல்வாதி தான் என விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

மாஃபா பாண்டியராஜன் குறித்து திமுக எம்பி செந்தில்குமாரின் ட்விட்டர் பதிவு:

இவருடைய இந்த பதிவிற்கு எதிராக எழுந்த கருத்துக்கள் இது வரை மறைத்து வந்த திமுகவின் வரலாற்றை ஆரம்பம் முதல் தற்போது வரை அனைத்தையும் வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டது. அவற்றில் சில பதிவுகள்.

https://twitter.com/m198029/status/1194301000271699968

தற்போது சுயமரியாதையை பற்றி பேசும் எம்பி நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது தானும் அன்புமணி ராமதாஸ் அவர்களின் சமூகம் தான் என சாதியை வைத்து வாக்கு கேட்ட இவர் வெற்றி பெற்ற பின் தான் திராவிடன் என்றும், மேலும் சாதி பெயரை ஒழிக்க போவதாகவும், சாதியை கூறிக் கொண்டு தொகுதி மக்கள் தன்னை பார்க்க வரக் கூடாது என்றும் கூறியுள்ளார். தான் வெற்றி பெற சாதியை பயன்படுத்தலாம் ஆனால் தொகுதி மக்கள் அந்த சாதி பெயரை பயன்படுத்தி கொண்டு தன்னை பார்க்க வரக் கூடாது என்பது தான் சுய மரியாதையா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

author avatar
Ammasi Manickam