பொன்முடியை விழுப்புரம் மாவட்டத்தை விட்டே விரட்டிய எடப்பாடி! பின்னணியில் இராமதாஸ்

0
121

பொன்முடியை விழுப்புரம் மாவட்டத்தை விட்டே விரட்டிய எடப்பாடி! பின்னணியில் இராமதாஸ்

விழுப்புரம் மாவட்டம் தற்போது இரண்டு மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தை பிரித்து உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் வருவாய் கோட்டங்களும், சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளூந்தூர்ப்பேட்டை, கல்வராயன்மலை தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன.

விழுப்புரத்தில் விழுப்புரம் திண்டிவனம் வருவாய் கோட்டங்களும், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், செஞ்சி, திண்டிவனம், மேல்மலையனூர், மரக்காணம், கண்டச்சிபுரம் தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன.

இது ஒருபுறம் இருந்தாலும் கட்சிகளுக்கிடையே அமைப்பு ரீதியில் அதிமுகவும் திமுகவும் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

அதாவது விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்த வரை அதிமுகவின் அமைச்சர் சீ.வி. சண்முகத்துக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் திண்டிவனம்,வானூர், செஞ்சி, மயிலம், விழுப்புரம்,விக்கிரவாண்டி என ஆறு தொகுதிகள் அவரது கட்டுப்பாட்டில் வருகிறது.

திமுகவைப் பொறுத்தவரை மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய தளபதி எனப்படும் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் ஆதிக்கமே இருந்து வருகிறது. அவரது கட்டுப்பாட்டில் விழுப்புரம் மத்திய மாவட்டம் என்று அமைப்பு ரீதியாக திமுக பிரிக்கப்பட்ட பின்பு விழுப்புரம்,விக்கிரவாண்டி, வானூர், திருக்கோவிலூர் என நான்கு தொகுதிகள் வருகிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் பொன்முடி தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதியதாக பிரிக்கப்பட்டு உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள திருக்கோவில் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளார்.

அதாவது தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திருக்கோவிலூர் தொகுதி சென்றுவிட்டது. இந்த சூழ்நிலையில் அவருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் அல்லது விழுப்புரம் மாவட்ட செயலாளர் என எதாவது ஒன்றை திமுக அமைப்பு ரீதியாக அறிவிக்கப்பட வேண்டும். இதில் திமுக தலைமை என்ன செய்யப் போகிறது என்று திமுகவினரிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விழுப்புரம் தொகுதியில் வன்னியர் சமுதாய வாக்குகள் பெரும்பாலும் திமுகவிற்கு எதிர்ப்பாக விழுந்ததால் தான் பொன்முடி விழுப்புரம் தொகுதியை விட்டு அவரின் சொந்த தொகுதியான திருக்கோவிலூர் தொகுதிக்கு சென்று போட்டியிட்டார். கடந்த மாதம் நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கூட வன்னியர்களின் பலமிக்க தொகுதி என்பதால் பொன்முடியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் வன்னியர்கள் முழு மூச்சாக செயல்பட்டனர். இதற்கு பலனும் கிடைத்துவிட்டது.

திமுகவில் உள்ள வன்னிய பிரமுகர்களை வைத்து கடுமையாக பிரச்சாரம் செய்தும், மு.க.ஸ்டாலின் சுழன்று சூறாவளியாக பிரச்சாரம் செய்தும், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தரப்படும் என்று வாக்குறுதி அளித்தும், வன்னியர்கள் திமுகவை எதிர்த்து வாக்களித்தது மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தியது.

தோல்விக்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்ததில், பொன்முடி எதிர்ப்பு காரணமாக தான் விக்கிரவாண்டியில் நாம் தோல்வி அடைந்தோம் என்று பெரும்பாலான திமுக நிர்வாகிகள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர். அவர் செய்து கொண்டு வரும் வன்னியர் எதிர்ப்பு அரசியல் தான் இதற்கு முக்கிய காரணம் என்றும், வன்னியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தனது சொந்த சாதியினருக்கும் மட்டும் தான் விழுப்புரம் மாவட்ட திமுகவில் முன்னிலைப்படுத்தி பதவிகளை அனுபவிக்க செய்து வந்தார் என்றும் கூறியுள்ளனர். மேலும் இதனாலேயே தோல்வியை பரிசாக பெற்றோம் என்று திமுகவில் உள்ள வன்னியர்களே தெரிவித்தது பொன்முடியை அதிர்ச்சி அடைய செய்தது. சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சி நலனுக்காக நான் சர்வாதிகாரியாக கூட மாறுவேன் என்று திமுக மாவட்ட செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். இது பொன்முடிக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக உள்ள திருக்கோவிலூர் தொகுதி முதலில் விழுப்புரம் மாவட்டத்தில்தான் சேர்க்கப்படுவதாக இருந்தது. விக்கிரவாண்டி வெற்றிக்குப் பிறகு அதிமுகவின் பார்வையில் பொன்முடியை விழுப்புரம் மாவட்டத்தை விட்டே விரட்ட வேண்டும் என்ற சிந்தனை மேலோங்கியது. இதனால் திடீரென திருக்கோவிலூர் தொகுதியை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைத்தது ஆளும் தரப்பு. இதனால் ஏற்படும் பாதிப்பு எல்லாம் பொன்முடிக்கு தான். குறுநில மன்னன் போல் கட்சியிலும் ஆட்சியிலும் பங்கு கொண்ட பொன்முடி இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் அதிமுக தனது அஸ்திரத்தை எடுத்துள்ளது. மாவட்டத்தில் அடங்கியுள்ள தொகுதிகள் அனைத்துமே வன்னியர்கள் பலமிக்க தொகுதியாகும் விழுப்புரம் விக்கிரவாண்டி,மயிலம்,திண்டிவனம்,வானூர் இந்த தொகுதியில் வன்னியர்கள் சராசரியாக 55 சதவீதம், தலித் சமுதாயம் சராசரியாக 35 சதவீதம் மீனவர்கள் மற்றும் சிறுபான்மை சமுதாயத்தினர் போன்றவர்கள் 10 சதவீதம் பேர் அடங்கியுள்ளனர்.

வன்னியர் சமுதாயத்தை சேரந்தவரான அமைச்சர் சி.வி சண்முகம் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு விழுப்புரம் மாவட்டத்தின் அசைக்கமுடியாத மாவட்ட செயலாளராக மாறிவிட்டார். ஆனால் பொன்முடி தற்போது விழுப்புரம் மாவட்ட செயலாளரா? அல்லது கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரா? என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர் விழுப்புரம் மாவட்ட திமுக உடன்பிறப்புகள்.

பாமக நிறுவனர் ராமதாஸின் சொந்த மாவட்டமான விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வந்தார் பொன்முடி. இதனாலயே வன்னியர்களை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ள விடாமல் ஒதுக்கி வைத்தார் பொன்முடி.

தற்போது முதலமைச்சர் எடப்பாடியும் பாமக நிறுவனர் ராமதாஸும் கைகோர்த்து உள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தை விட்டு பொன்முடியை விரட்டி அடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் திருக்கோவிலூர் தொகுதி கள்ளக்குறிச்சியில் மாவட்டத்தில் சேர்ந்து சதி செய்து விட்டனர் என்று திமுக உடன்பிறப்புகள் கூவிக்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K