ஓபிஎஸ் எப்படி ஜல்லிக்கட்டு நாயகன்..? அதிமுகவை கலாய்த்த துரைமுருகன்! சட்டசபையில் புஹா ஹா ஹா..!!

0
121

ஓபிஎஸ் எப்படி ஜல்லிக்கட்டு நாயகன்..? அதிமுகவை கலாய்த்த துரைமுருகன்! சட்டசபையில் புஹா ஹா ஹா..!!

இன்றைய சட்டசபை விவாத நேரத்தில் ஜல்லிகட்டு குறித்து திமுகவின் துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். இதனால் சபையில் பலத்தை சிரிப்பலை எழுந்தது. இந்த கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலை கூறினார்.

கேள்வி நேரத்தில் துரைமுருகன் பேசுகையில்; ஓபிஎஸ்ஸை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அடிக்கடி கூறுகிறீர்களே, அவர் எந்த ஜல்லிக்கட்டுக்கு போனார்..? எங்கே மாடு பிடித்தார்..? என்று கேள்வி எழுப்பினார்.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. அங்கு ஓபிஎஸ் மாடி பிடித்தால் நாங்கள் வந்து பார்ப்பதற்கு தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.

இதனால் சபையில் பலத்தை சிரிப்பலை தோன்றியது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில்;

துணை முதல்வர் ஓபிஎஸ் 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்காக டெல்லி வரை சென்று, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டதால் அவரை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்கிறோம் என்று கூறிவிட்டு,

தற்போது புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு நடக்கிறது, துரைமுருகன் அவர்கள் அங்கு வந்தால் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்கிறோம். அவர் களத்தில் இறங்கி மாடுபிடித்தாலும் அதற்கும் ஏற்பாடு செய்கிறோம்’ என்று விஜயபாஸ்கர் கூறினார்.

இதனால் சட்டசபையில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது. திமுக அதிமுகவை கலாய்த்தாலும் பதிலுக்கு அதிமுக திமுகவை சரியான நேரத்தில் கலாய்த்துவிட்டது என்பதே உண்மை.

author avatar
Jayachandiran