நாட்டில் மேலும் 13,086 பேருக்கு நோய் தொற்று பரவல்!

0
40

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 13,086 பேருக்கு நோய் தொற்று பரவல் உறுதியாகி இருக்கிறது. 12,456பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற புள்ளி விவரத்தினடிப்படையில் தெரிவித்திருப்பதாவது நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 13,086 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,35,31,650 என இருந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 12,456 பேரு குணமடைந்து இருப்பதால் இந்த நோய் தொற்று பரவிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 4,28,91,933 என இருக்கிறது தற்போது சிகிச்சையில் இருப்பவரின் எண்ணிக்கை 1,14,475 என இருக்கிறது.

நோய் தொற்று பரவல் காரணமாக, இதுவரையில் 19 பேர் பலியாகி இருப்பதால் பலியானவரின் எண்ணிக்கை 5,25,242 என அதிகரித்தது.

நாட்டில் இதுவரையில் 198.09 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,44,805 தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.