நயன்தாரா எனப் பெயர் வைத்தது நான்தான் : இதெல்லாம் ஒரு பெருமையா ? மோதிக்கொள்ளும் இயக்குனர்கள் !

0
83

நயன்தாரா எனப் பெயர் வைத்தது நான்தான் : இதெல்லாம் ஒரு பெருமையா ? மோதிக்கொள்ளும் இயக்குனர்கள் !

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு முதன் முதலில் அந்த பெயரை வைத்தது யார் என இரு மலையாள இயக்குனர்கள் மோதிக் கொண்டுள்ளனர்.

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகிய சினிமா ரசிகர்களுக்கும் நயன்தாரா பிரபலமான நாயகி. தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் என சொல்லுமளவுக்கு அளவுக்கு இப்போது அவருக்கென தனியாக ஒரு மார்க்கெட் உள்ளது.

இன்று இத்தகைய நிலையில் இருக்கும் நயன்தாரா முதலில் அறிமுகமானது மனசிக்கனரே என்ற மலையாள படத்தில். அந்த படத்தை இயக்கியவர் சத்யன் அந்திக்காடு எனும் மலையாளத்தின் புகழ்பெற்ற இயக்குனர். அப்படத்தில் தான் அவரது இயற்பெயரான டயானா மரியம் குரியன் என்ற பெயர் நயன்தாரா என மாற்றப்பட்டு திரையில் தோன்றியது.

அதன் பின் அவர் நடித்த எல்லா படங்களிலும் நயன்தாரா என்றே இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பெயரை யார் வைத்தது என்பது தொடர்பாக இரு மலையாள இயக்குனர்கள் போட்டிப் போட்டுக் கொண்டுள்ளனர். சகபாடி 1975 என்ற படத்தை இயக்கிய ஜான் டிட்டோ என்பவர் ’தான் 2003 ஆம் ஆண்டு ஒரு கதை விவாதத்தில் இருந்தேன். அப்போது சத்யன் அந்திக்காடு படத்தில் பணிபுரியும் புகைப்படக் கலைஞர் என்னிடம் புதுமுக நாயகிக்கு பெயர் தேடுவதாக சொல்லி, என்னை ஒரு நல்லப் பெயர் சொல்ல சொன்னார். அப்போது நான் சொன்ன பெயர்தான் நயன்தாரா. ஆனால் இந்த விஷயம் நயன்தாராவுக்கே தெரியாது’ எனக் கூறியுள்ளார்.

ஆனால் இதை இயக்குனர் சத்யன் அந்திக்காடு மறுத்துள்ளார். தனக்கு ஜான் டிட்டோ யாரென்ற தெரியாது எனவும் தனது படத்தின் கதையாசிரியர் ரஞ்சன் பிரமோத்தான் அந்தப் பெயரை சொன்னதாக சொல்லியுள்ளார். இந்த இருவரின் சண்டை மலையாளத் திரையுலகில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

எப்படி நயன்தாராவுக்கு யார் அந்த பெயரை வைத்தது என்றே தெரியாதோ அதே போல் இப்போது இருவரும் சண்டைப் போட்டுக் கொள்வதும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K