எப்போ தான் கல்யாணம்? இயக்குனர் விக்னேஷ் சிவனின் பதில் என்ன?

0
89

திரைத்துறையில் ஆண் நடிகர்களுக்கு இணையாக ஒரு பெண் நடிகை வளர்ந்து வருவது சற்று கடினமான செயல் எனலாம். அவ்வகையில் இந்த காலத்தில் இருந்தே ஜெயலலிதா, சாவித்திரி, ஸ்ரீதேவி, ஐஸ்வர்யா ராய் போன்ற பல நட்சத்திரங்கள் ஆண் நடிகர்களுக்கு இணையாக தங்களுக்கு என ஒரு பதிவை சினிமா துறையில் ஏற்படுத்தியிருக்கின்றனர். ஹீரோக்களுக்கு இணையாக வலம் வருவதோடு அவர்களுக்கு நிகரான சம்பளம், ரசிகர் பட்டாளம், நிலையான கதையம்சம், நீண்டகால திரைப்பயணம் என்று கலக்கிய ஹீரோயின்களின் எண்ணிக்கை கணிசமே.

அவ்வகையில் கேரள பின்புலத்தை சார்ந்த நடிகை நயன்தாரா,ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்பு ரஜினியுடன் சந்திரமுகி, இளைய தளபதி விஜய் உடன் வில்லு, நடிகர் சிம்புவுடன் வல்லவன், நடிகர் சூர்யா உடன் கஜினி,போன்ற படங்கள் வெற்றி பெற்றாலும் அவருடைய திரை பயணத்திற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகினார். சுலபமாக காதல் வலையில் சிக்கி சர்ச்சைகளுக்கு உள்ளாகி அவதிப்பட்டார்.

ஆனால் அவர் “நானும் ரவுடிதான், ராஜா ராணி” போன்ற படங்களின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து தன் திறமையை வெளிப்படுத்தி, “லேடி சூப்பர் ஸ்டார்” என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். எந்த ஹீரோயினும் இந்த அளவுக்கு மக்களால் போற்றப் படவில்லை.அதுவும் ஆண் நடிகர்களைப் போல் தனக்கென ரசிகர் பட்டாளம் குவித்து மக்களிடையே நல்ல மதிப்பையும் வரவேற்பையும் பெற்றார். ஹீரோக்கள் இல்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளான “மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா” போன்ற படங்களில் நடித்து அவரது கதாபாத்திரத்தைப் பார்த்து வியக்கும் அளவில் மக்களின் மனதில் பதிவிட்டார்.

அவ்வகையில் “நானும் ரவுடிதான்” படத்தின் இயக்குனர் “விக்னேஷ் சிவனும்” நயன்தாராவும் காதலிப்பது சிலமாதங்களுக்கு அவர்கள் பதிவிடும் புகைப்படங்களை வைத்து உறுதி செய்யப்பட்டது. அதோடு நயன்தாராவிற்கு படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் இவரும் விக்னேஷ் சிவனும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்கு அவர்கள் எடுக்கும் புகைப்படங்களையும் விளையாடும் வீடியோக்களையும் வலைதளங்களில் பரவி விட்டனர்.

கடந்த ஐந்து வருடங்களாக இந்த காதல் ஜோடிகள் காதலித்து வந்த நிலையில் சமீப காலமாக லிவ்விங் டூகெதரில் இருப்பதாக தகவல் வெளியானது.

கடந்த முறை லவ்வர்ஸ் டேவுக்கு கூட “நாள்தோறும் நமக்கு காதலர் தினம் தான்” என விக்கி சோசியல் மீடியாவில் பதிவிட, ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். காரணம் விக்கி சோசியல் மீடியா பக்கம் வந்தாலே ரசிகர்கள் கேட்கும் ஒரே கேள்வி “எப்போ சார் நயன்தாராவை கல்யாணம் செஞ்சிப்பீங்க?” என்பது தான் பிரதானமாக உள்ளது.

இந்த ஊரடங்கில் கூட நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்ய உள்ளதாகவும் அதற்காக அவர்கள் கோவிலுக்கு பரிகாரம் செய்ய போனதாகவும்,பரிகாரம் முடிந்தவுடன் இவர்கள் திருமணம் குறித்த தகவல் அறிவிக்கப்படும் என்றும் வெளியாகின. இதனைக் கேட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் அப்படி நடப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகத்தான் உள்ளது ஏனெனில் லேடி சூப்பர் ஸ்டாரிடம் கைவசம் உள்ள படங்களின் எண்ணிக்கை ஏராளம் என்பதால் இந்த ஆண்டு அவர்களுடைய திருமணத்திற்கு வாய்ப்பு இல்லை எனலாம்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் நயன்தாரா-விக்கி அவர்களின் திருமணம் பற்றிய கேள்விக்கு, “காதல் போரடிக்கும் போது கல்யாணம் செய்து கொள்வோம்” என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
இவர்களின் திருமணத்திற்கான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது.

author avatar
Parthipan K