நடிகர் விஜய்க்கு கதை சொன்ன இயக்குனர் வெற்றிமாறன்! இதுவும் நாவல் கதையா?

0
88
Director vetrimaaran told story to actor vijay
Director vetrimaaran told story to actor vijay

நடிகர் விஜய்க்கு கதை சொன்ன இயக்குனர் வெற்றிமாறன்! இதுவும் நாவல் கதையா?

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.மேலும் இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன்,நடிகை பூஜா ஹெக்டே,யோகி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்தத் திரைப்படம் அடுத்த வருடம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இதனிடையே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் சமீபத்தில் நடிகர் விஜய்க்கு ஒரு கதை சொல்லியுள்ளதாக தெரிகிறது.மேலும் இந்த கதையை கேட்டுவிட்டு நடிகர் விஜய் இன்னும் அவருக்கு எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை என்றே தெரிகிறது.

இயக்குனர் வெற்றிமாறன் நாவல்களைத் தழுவி படங்களை எடுத்து வருகிறார்.அவர் இயக்கிய அசுரன் திரைப்படம் பூமணி எழுதிய வெக்கை நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.விசாரணை திரைப்படமும் லாக்அப் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.தற்போது நடிகர் விஜய் அவர்களிடம் கூறிய கதையும் நாவலைத் தழுவிதான் கூறியிருப்பதாக தெரிகிறது.சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் விஜய்க்கு கதை சொல்லிவிட்டு அவர் பதிலுக்கு காத்திருப்பதாக கூறியிருந்தார்.

கொட்டா நீலிமா எழுதிய Shoes of the Dead என்ற புத்தகத்தின் கதையை விஜய்யிடம் கூறியிருப்பதாக தெரிகிறது.விவசாயிகள் தற்கொலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வலுவான அரசியல் பற்றிய படமாக இது உருவாக இருக்கிறது.சமீபத்தில் நீலிமா அவர்கள் வெற்றிமாறன் என்னுடைய புத்தகத்தை படமாக எடுப்பது மகிழ்ச்சி என ட்வீட் செய்தார்.இதனால் உறுதி செய்யப்பட்ட அந்த படத்தின் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் நடிகர் விஜய் இணைந்து நடிப்பார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Parthipan K