குஷ்புவிற்கு முன்பு பிரபல நடிகையை காதலித்த இயக்குனர் சுந்தர் சி

0
99
#image_title

குஷ்புவிற்கு முன்பு பிரபல நடிகையை காதலித்த இயக்குனர் சுந்தர் சி

தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான சுந்தர் சீ, இவர் ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவர், தமிழில் 24 திரைப்படங்களை இயக்கியுள்ளார். தலைநகரம் படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். ஆரம்ப காலத்தில், மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்த இவர் முறை மாமன் என்ற நகைச்சுவைத் திரைப்படம் வாயிலாக இயக்குனராக அறிமுகமானார்.

இவருடைய பல படங்களில் கதாநாயகியின் பெயர் இந்து என்பதாகும். உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம் ஆகிய திரைப்படங்கள் இவருடைய இயக்கத்தில் குறிப்பிடத்தக்கவையாக அமைந்தன. மேட்டுக்குடி, வின்னர், நாம் இருவர் நமக்கு இருவர், லண்டன், கலகலப்பு போன்றவை இவர் இயக்கத்தில் வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படங்கள் ஆகும்.

இயக்குனர் சுந்தர் சி நடிகை குஷ்புவை காதலித்து கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அவந்திகா, ஆனந்திகா என இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த சுந்தர் சி, தன்னுடன் பணியாற்றிய நடிகைகள் குறித்து பேசியுள்ளார். அப்பொழுது மறைந்த நடிகை சௌந்தர்யா குறித்து பேசிய அவர்,

நான் பணியாற்றிய நடிகைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த நடிகை. ரொம்ப நல்ல கேரக்டர், அப்படியொரு நல்ல பெண்ணை பார்ப்பது ரொம்ப அரிது.

ஒருவேளை குஷ்பு தன் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் கண்டிப்பாக செளந்தர்யாவுக்குதான் ப்ரபோஸ் பண்ணியிருப்பேன். சவுந்தர்யாவின் அண்ணனுக்கு அவர் மீது அதிக பாசம். தங்கையை விட்டு நகரவே மாட்டார் இறக்கும் போதும் கூட இருவரும் ஒன்றாகவே இறந்து விட்டார்கள், ரொம்பவே துரதிர்ஷ்டவசமானது என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்