இயக்குனர் எஸ் ஜே சூர்யா இப்படிப்பட்டவரா! பகிரங்கமாக உண்மையை கூறிய இயக்குனர்!

0
84
Director SJ Surya is like that! The director who told the truth in public!
Director SJ Surya is like that! The director who told the truth in public!

இயக்குனர் எஸ் ஜே சூர்யா இப்படிப்பட்டவரா! பகிரங்கமாக உண்மையை கூறிய இயக்குனர்!

தனியார் ஊடகத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் பிரவீன் காந்தி தனது பிளாஷ்பேக் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்தும் பலவற்றை பேசினார். ரஜினி சார் தான் எனக்கு ஓர் இன்ஸ்பிரேஷன். நானும் கருப்புதான் அதனால் தாழ்வு மனப்பான்மை அதிகமாகவே இருந்தது. அந்த காலத்துல எல்லாம் சிகப்பாக இருப்பவர்களுக்கு தான் அதிக வாய்ப்புகள் கிடைக்கும். அதனால் எனக்குள் தாழ்வு மனப்பான்மை அதிகமாக இருந்தது. இதனை அனைத்தையும் உழைத்தவர் தான் ரஜினி. கருப்பாக இருந்தாலும் திரையில் முன்னணியாக இருந்தவர்தான் ரஜனி.

ஒரு நாள் ரஜினி சார் பி வாசு உடைய உதவி இயக்குனர் கிருஷ்ணன் என்பவருக்கு ஒரு கேசட் கொடுத்து கேட்க சொன்னார். ஆனால் அதனை அவர் கேட்காமல் வாங்கி வைத்திருந்தார். நான் அது என்னவாக இருக்கும் என்று எண்ணி அதனை வாங்கி என் வீட்டில் சென்று கேட்க ஆரம்பித்தேன். அந்த கேசட்டில் யேசுதாஸ் குரலில் ஓம் என்று கூறியவாரே தியானம் செய்யும் வகையில் இருந்தது. அந்த சமயத்தில் இருந்த தியானத்தில் அதிகளவில் ஈடுபட ஆரம்பித்தேன். எனக்கு ஒரு புதிய உணர்வு கிடைத்தது இவ்வாறு பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இதனை அடுத்து தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ்ஜே சூர்யா மற்றும் முருகதாஸ் பற்றியும் சிலவற்றை கூறினார்.

எஸ் ஜே சூர்யா என்னைப் போன்றவர். எதுக்கும் கூச்சபடாதவர் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். இந்த காலகட்டத்தில் ஒரு பெண்ணுடன் டூவீலரில் செல்வது கேஷுவல் ஆகிவிட்டது. ஆனால் எஸ் ஜே சூர்யா அப்பொழுதே சிறிதளவு கூச்சம் இன்றிய பெண்கள் வந்தால் கூட அவர்களிடம் லிஃப்ட் கேட்டு வந்துவிடுவார். ஏனென்றால் அவருக்கு காத்திருப்பது பிடிக்காது. எந்த வேலையும் உடனடியாக செய்வார். இவ்வாறு அவர் வெளிப்படையாக இருப்பதால் தான் இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்துள்ளார்.

அதேபோல முருகதாஸ் மிகவும் நகைச்சுவை தன்மை உடையவர். அது மட்டுமின்றி நல்ல ஓவியரும் கூட, ஆனால் இவர் இவ்வளவு தூரம் வளர்ந்து வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. கஜினி துப்பாக்கி என்று பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். அவரது உயரம் தான் சிறியது ஆனால் அவர் இருக்கும் இடம் ரொம்ப பெரியது என அந்த பேட்டியில் இயக்குனர் பிரவீன் காந்தி தனது பிளாஷ்பேக் மெமரியை கூறினார்.