நேரடி விமானப் போக்குவரத்துத்திற்கு அனுமதி வழங்கிய கனடா அரசு! மகிழ்ச்சியில் இந்தியா!

0
84

நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் இருந்து அயல் நாடுகளுக்கு விமான போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நோய்த்தொற்று பரவல் குறைய தொடங்கியதை அடுத்து மெல்ல, மெல்ல மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு தளர்வு அறிவித்தனர்.

அதனடிப்படையில் முதலில் ஒரு நாட்டு போக்குவரத்துகள் தொடங்கின. தற்போது நோய்தொற்று பாதிப்பு குறைந்து வருகின்ற சூழ்நிலையில், இந்தியாவிலிருந்து வருகை தரும் நேரடி விமானங்களை அனுமதிக்க இன்றைய தினம் முதல் கனடா நாட்டு அரசு முடிவெடுத்து இருக்கிறது. இதன் மூலமாக கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு மேலாக இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் தீவிரமாக இருந்த சமயத்தில் இந்தியாவுடனான நேரடி விமான சேவையை கனடா அரசு ரத்து செய்தது. சென்ற ஏப்ரல் மாதம் முதல் இந்த தடை அமலுக்கு வந்தது, விமான தடையை ரத்து செய்து நேரடி விமான போக்குவரத்தை தொடங்குவதற்காக முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் பல காரணங்களால் போக்குவரத்து ஆரம்பிக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டு கொண்டே வந்தது.

இந்த நேரடி விமான தடை காரணமாக கனடா நாட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்தியர்கள் பல சிரமங்களை எதிர் கொண்டார்கள். இணைப்பு விமானங்களின் மூலமாக ஸ்பெயின், துபாய், மெக்சிகோ ,உள்ளிட்ட மூன்று நாடுகளை கடந்து கனடாவிற்கு செல்லும் நிலை தற்போது வரையில் இருந்து வருகிறது. அதோடு மூன்றாவது நாட்டில் நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சுமார் ஒன்றரை லட்சம் அளவில் முடிய வேண்டிய பயணச்செலவு ஐந்து லட்சத்திற்கும் அதிகமாக ஆனது.

இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் முதல் இந்தியாவில் இருந்து வரும் நேரடி விமானங்களை அனுமதிப்பதற்கு கனடா அரசு முடிவு செய்திருக்கிறது. இதன் மூலமாக கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்த தடை நீக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார் கனடா போக்குவரத்து துறை பயணிகளுக்கான நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. பயணிகள் புறப்பட திட்டமிட்ட 18 மணி நேரத்திற்கு விமானநிலையத்தில் இருக்கின்ற அங்கீகரிக்கப்பட்ட ஜனஸ்ட்ரிங்க்ஸ் ஆய்வகத்தில் நோய் தொற்று பரிசோதனை செய்து நோய் தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் இருக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறது.

அந்த நாட்டின் இந்த முடிவை இந்திய தூதர் அஜய் பிசாரியா இரண்டு நாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஏர் இந்தியா மற்றும் ஏர் கனடா உள்ளிட்ட நிறுவனங்கள் இன்று முதல் டெல்லி மற்றும் டொரண்டோ வான்கூவர் இடையே தினசரி விமானங்களை இயக்க இருக்கின்றன. பயணத்தை மேலும் எளிமையானதாக கனடா நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது எனவும் அஜய் பிசாரியா கூறியிருக்கிறார்.