ஜாக்கெட் இல்லாத பளபள மேனியுடன், கையில் விளக்குடன் – தர்ஷா குப்தா

0
121

https://www.instagram.com/p/CS0xkICBYbV/?utm_source=ig_web_copy_link

குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா தனது ஓணம் வாழ்த்துக்களை மக்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக தெரிவித்துள்ளார்.

செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் தர்ஷா குப்தா! குக் வித் கோமாளி சீசன் இரண்டில் போட்டியிட்டு விரைவிலேயே எலிமினேட் ஆனார். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. இன்ஸ்டாகிராமில் 1.5 ஃபாலோயர்ஸ்களை பெற்றுள்ளார்.
அவர் போடும் போஸ்டர்கள் இளைஞர்களை அவ்வப்போது சுண்டி இழுத்து வருகிறது. லைக்குகளை அள்ளிக் குவிக்கிறது.இந்த கொரோனா காலத்தில் அனைவருக்கும் உதவும் வகையில் தினமும் சென்று தெருவோரம் இருக்கும் மக்களுக்கு உதவி செய்தார். இந்த சேவை மனப்பான்மையை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
சினிமா நடிகைகள் தான் அவ்வப்போது போட்டோக்களை எடுத்து போஸ்டர்களை பதிவிட்டு வருகிறார்கள் என்றால் சீரியல் நடிகைகளும் அதில் பஞ்சமில்லாமல் தினமும் ஒரு போஸ்ட் போட்டு இளசுகளை தூண்டி விடுகிறார்கள்.

நீல நிற புடவையில் மற்ற ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு பிதாமகன் படத்தில் வரும் லைலா மற்றும் சூர்யாவின் டயலாக்கை நடித்த வீடியோ ஒன்றை வெளியாகி அதிக லைக்குகள் பெற்றுள்ளது.

கிராமத்து பாணியில் ஜாக்கெட் இல்லாமல் மஞ்சள் நிற கண்டாங்கி புடவையில் கொழுகொழு இடுப்பை காட்டி அவர் கொடுத்த போஸ் இணையத்தையே சூடாக்கியது. பார்ப்பதற்கு அப்படியே பழைய கோயம்புத்தூர் கவுண்டர் பொண்ணுங்களை பார்ப்பது போலிருந்தது. அவரும் கோயம்புத்துர் கார பெண் என்பதால் வித விதமான போஸ் கொடுத்து போட்டோ ஷூட் தங்களை எடுத்து இருந்தார். டிராக்டர் ஓட்டுவது போல கூட போட்டோ இருந்தது.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் வாவ், கார்ஜியஸ், கோயம்புத்தூர் பொண்ணு, அழகான சிலை, கண்டாங்கி சேலை யில் அழகிய சிலை என்றெல்லாம் புகழ்ந்தனர்.

பின் சில தினங்களுக்கு முன் பாவாடை தாவணியில் கூடையை இடுப்பில் வைத்துக் கொண்டு அவர் கொடுத்த போஸ் நச் என இருந்தது.

இன்று ஓணம் என்பதால் மக்களுக்கு வாழ்த்து கூறும் வகையில் மஞ்சள் நிற புடவையில் கையில் விளக்குடன் அவர் வெளியிட்ட புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது என்று சொல்லலாம். அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதற்கு ஒரு கேப்சனும் கொடுத்துள்ளார். வண்ணமும் ஒளியும் உங்கள் வீட்டில் நிறைய சந்தோஷமும் நிறைய எனது ஓணம் வாழ்த்துக்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

author avatar
Kowsalya