இயக்குனர் மாரி செல்வராஜுடன் மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
162
dhanush-joins-hands-with-director-mari-selvaraj-again-fans-in-excitement
dhanush-joins-hands-with-director-mari-selvaraj-again-fans-in-excitement

இயக்குனர் மாரி செல்வராஜுடன் மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் அதிகளவு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் அண்மையில் தெலுங்கு சினிமாவின் இளம் இயக்குனராக வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் வாத்தி. இந்த படத்தை சித்தாரா என்டர்டைன்மென்ட் மற்றும் பார்ச்சூன் போர் சினிமா சார்பில் தயாரிப்பாளர் நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்த படம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்திருக்கின்றார். இதில் பல முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழில் வாத்தி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியாகி உள்ளது.

வாத்தி  திரைப்படம் ரூ 100 கோடி வசூலை கடந்தது. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்து வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் இந்த படத்தின் மீது ரசிகர்கள் அளவு கடந்த எதிர்பார்ப்பனை கொண்டுள்ளனர். இந்த படத்தில் தனுஷ் நடித்த பிறகு தன்னுடைய 5௦ வது  படத்தை இயக்கி அதில்  நடிக்க உள்ளார்.

இதை முடித்த பின் மீண்டும் மாரி  செல்வராஜ் இயக்கத்தில் நடக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் இவர்கள் இருவரும் இணைந்து கர்ணன் எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்துள்ளனர். அதனால்  ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மாரி  செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக மாமன்னன் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ் ,பகத்வாஸில், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்க இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K