சென்னையில் பிரம்மாண்டமாக நடந்த கேப்டன் மில்லர் பூஜை… வைரலாகும் புகைப்படங்கள்!

0
77

சென்னையில் பிரம்மாண்டமாக நடந்த கேப்டன் மில்லர் பூஜை… வைரலாகும் புகைப்படங்கள்!

தனுஷ் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இதை அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார்.

நடிகர் தனுஷ், தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய சினிமா அளவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். கோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் தற்போது வாத்தி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

இப்படி பல மொழிகளில் பல படங்களில் நடித்து வரும் தனுஷ் அடுத்து ராக்கி மற்றும் சாணிக்காயிதம் ஆகிய படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு கேப்டன் மில்லர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகும் படம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

படத்தில் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். மதன் கார்க்கி வசனங்களை எழுத ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். படம் 1930 களில் நடப்பது போன்ற வரலாற்றுக் கதையாக உருவாக உள்ளது.

அடுத்த மாத தொடக்கத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தென்காசியில் தொடங்க உள்ளது. இந்நிலையில் நேற்று சென்னையில் படத்தின் பூஜை சமீபத்தில் நடந்துள்ளது. இதில் படத்தில் நடிக்கும் தனுஷ், பிரியங்கா மோகன் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.