விவாகரத்து முடிவைக் கைவிட்டு இணையப் போகிறார்களா தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதி?

0
105

விவாகரத்து முடிவைக் கைவிட்டு இணையப் போகிறார்களா தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதி?

சமீபத்தில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதிகள் விவாகரத்து செய்யப் போவதாக தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்தனர்.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது திருமண வாழ்க்கையை 18 வருடங்களாக வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் விவாகரத்து செய்யப் போதாக அறிவித்தனர். இவர்களுக்கு லிங்கா மற்றும் யாத்ரா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

மேலும் ஐஸ்வர்யா தன்னுடைய சமூகவலைதளங்களில் ஐஸ்வர்யா தனுஷ் என்ற பெயரை மாற்றி ஐஸ்வர்யா ரஜினி எனவும் வைத்திருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் ஐஸ்வர்யா தனுஷ் உடன் இணைந்து வாழ வாய்ப்பே இல்லை என்று கூறி வந்தனர்.

இந்நிலையில் தனுஷ் மட்டும் ஐஸ்வர்யாவின் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்வதாகவும் ஆனால் அது தோல்வியில் முடிந்ததாகவும் தகவல்கள் பரவின. இருவருமே தங்களுடைய திரைப்பணியில் பிஸியாக இருந்தனர். ஐஸ்வர்யா மீண்டும் படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டி வந்தார். அதேபோல் தனுஷும் நானே வருவேன் ,வாத்தி ,திருச்சிற்றம்பலம், என படங்களில் நடித்து வந்தார்.

இதற்கிடையே சமீபத்தில் மகனின் பள்ளி விழா ஒன்றில் இருவரும் கலந்துகொண்டனர். அப்போது வெளியானப் புகைப்படம் வைரல் ஆனது. இந்நிலையில் இப்போது இருவரையும் மீண்டும் இணைத்து வைக்க குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அதற்கு இருவரும் சம்மதித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களாக இந்த தகவல் சமூகவலைதளங்களில் அதிகளவில் பரவி வருகிறது.