டெல்லியில் காவலர் உயிரிழப்பு! தமிழக சிஏஏ போராட்டத்தில் உயிரிழப்பை தடுக்க எடப்பாடி கையாண்ட டெக்னிக் பார்முலா இதுதான்?

0
108

டெல்லியில் காவலர் உயிரிழப்பு! தமிழக சிஏஏ போராட்டத்தில் உயிரிழப்பை தடுக்க எடப்பாடி கையாண்ட டெக்னிக் பார்முலா இதுதான்?

டெல்லியில் நடந்து வரும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் தலைமை காவலர் ரத்தன் என்பவரை போராட்டகாரர்கள் கல்லால் அடித்துக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல இடங்களில் தீ வைத்து எரிக்கப்பட்டு டெல்லியே போர்க்களமாக மாறியுள்ளது. வன்முறை மேலும் அதிகரித்ததால் கண்ணீர் புகை குண்டு வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் போலீசார் கூட்டத்தை கலைத்தனர். காவலர் இறப்பிற்கு டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சிஏஏ போராட்டம் தீவிரமாக நடந்த போதும், தலைமை செயலகத்தை முற்றுகையிட்ட போதும் எந்த உயிரிழப்பு அசம்பாவிதமோ, தீ வைப்பு சம்பவங்களோ நடக்கவில்லை. காரணம், தமிழக காவல்துறைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி போட்ட ரகசிய உத்தரவுதான். முதற்கட்டமாக இஸ்லாமியர்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட பிறகு, ஜமாத்தின் முக்கிய நபர்களிடம் தந்திரமாக சமரசம் பேசி போராட்டத்தை நிறுத்தினர்.

சென்னை பழைய வண்ணாரபேட்டையில் பெருமளவு கூட்டம் கூடியது. கோவையில் விடிய போராட்டங்கள் நடந்தபோதும் பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லை. தமிழக அரசின் நுட்பமான அடுத்தகட்ட நகர்வுகளும், வட இந்திய ஆர்வக்கோளாறு அரசியல்வாதிகளை போன்று எடுத்தோம் கவிழ்த்தோம் என்று மத அரசியல் பேசாமல் சமத்துவ அரசியலை எடப்பாடி பழனிச்சாமி பேசியதாலே தமிழகத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஒவ்வொரு மணி நேரத்திலும் சம்பவம் குறித்த தகவல் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மொத்தத்தில் போராட்டத்தை சரியான வீயூகத்தின் மூலம் அதிமுக அரசு கையாண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

போராட்ட சம்பவத்தை வைத்து யார் மீதும் வழக்கு பதியவில்லை. அதிகபட்சமாக சென்னையில் நடந்த போராட்டத்தின் போது லேசான தடியடி நடத்தியது குறிப்பிடத்தக்கது.

author avatar
Jayachandiran