காதலனைக் கொன்று மகள் அருகே புதைத்த தந்தை! எந்த தந்தையாலும் தர முடியாத பரிசு!

0
85

காதலனைக் கொன்று மகள் அருகே புதைத்த தந்தை! எந்த தந்தையாலும் தர முடியாத பரிசு!

மகளின் தற்கொலைக்கு காரணமான அவரின் காதலனை கொன்று மகளின் சமாதி அருகே புதைத்த தந்தை:

ஆந்திர மாநிலம் துவாரகா திருமலை மண்டலத்தில் உள்ள துர்ல லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் பவன் கல்யாண். நரசிங்கபுரம் ஊராட்சி கொடுக்கப்பட்டியைச் சேர்ந்த மருது சியாமளா.இவர்கள் கல்லூரியில் போது காதலித்து வந்துள்ளனர். இருவரும் சில மாதங்களுக்கு முன் முன்னர் தன் காதலை வீட்டில் தெரிவித்துள்ளனர். இதற்கு அவர்கள் வெவ்வேறு சமூகத்தினை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த சியாமளா கடந்த 5 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் பவன் கல்யாண் தனது நண்பர்களுடன் கடந்த 11 ஆம் தேதி நிம்மலகுடேமில் உள்ள கால்வாய் கரையில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பாததால் இது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

இதில் இவர்கள் காதலித்தது தெரிய வந்த நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் சியாமளாவின் தந்தை இறுதியாக பவன் கல்யாணை அழைத்து சென்றது தெரியவந்துள்ளது. அவரிடம்  நடத்திய விசாரணையில் அவர் கல்யானை கொலை செய்ததும், பின்னர் உடலை சியாமளாவின் அருகில் புதைத்ததும் தெரிய வந்தது.

இதை அடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர், பவன் கல்யாண் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மகளின் காதலனை கொலை செய்து மகளின் அருகையிலேயே சமாதி கட்டியது அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K