ஒரே கல்லில் இரண்டு மாங்கா! மகனுக்கு பொண்டாட்டி மாமனாருக்கு ஆசை காதலி! 

0
87
Daughter-in-law's father-in-law's desire for a girlfriend!
Daughter-in-law's father-in-law's desire for a girlfriend!

ஒரே கல்லில் இரண்டு மாங்கா! மகனுக்கு பொண்டாட்டி மாமனாருக்கு ஆசை காதலி!

வேலூர் மாவட்டம் ஓட்டேரி கிராமத்தை சேர்ந்தவர்தான் ஸ்ரீ ராமு. இவருக்கு அந்த கிராமத்தில் சொத்து மதிப்பு அதிகம். இவர் திருமணத்திற்காக பெண் பார்த்து வந்துள்ளர்னர்.அவர் கிராமத்தை அடுத்து உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சொத்துக்காக தன்னுடைய 18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

பையனின் தாயார், தகப்பனார் யார் என்றும் சிறிதும் கூட விசாரிக்காமல் சொத்தை பார்த்து தன் மகளை திருமணம் செய்து வைத்துள்ளார். அம்மாவின் பேச்சை தட்ட முடியாமல் அந்த இளம் பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு தான் அப்பெண்ணிற்கு பல அதிர்ச்சி தரும் விஷயங்கள் தெரியவந்தது. அவரது கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது திருமணம் முடிந்த பிறகு தான் தெரியவந்துள்ளது.

என்ன செய்வது என்று தெரியாமல் மனநலம் பாதிக்கப்பட்ட கணவருடனே அப்பெண் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவ்வாறு குடும்பம் நடத்தி வந்தவர் திடீரென்று வேலூர் மாவட்டத்திலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், எனது மாமனார் எனக்கு மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இது குறித்து நான் அவரிடம் கேட்டபோது வெளியில் யாரிடமாவது இதை சொன்னால் உன் தங்கை மற்றும் உன் தாயை கொன்று விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

நான் என் தங்கையையும் அம்மாவையும் இழந்து விடுவேனோ என்ற பயத்தில் யாரிடமும் சொல்லவில்லை. இதையே மீண்டும் மீண்டும் என்னிடம் எனது மாமனார் கூறி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் நான் கர்ப்பம் தரித்து பெண் குழந்தையும் பெற்றெடுத்தேன். இத்தனை நாள் அவர் ஆசைக்கு இணங்க என்னை மிரட்டி வந்தவர் தற்பொழுது அதீத கொடுமைகளை கொடுத்து வருகிறார்.அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அப்பெண் புகார் அளித்துள்ளார்.