“இதற்கெல்லாம் என்னதான் பதில்” கதறும் பெற்றோர்! பாலியல் வன்கொடுமை செய்து நாக்கு அறுபட்டு இறந்த பெண்!

0
69

பிரதேச மாநிலத்தில் தலித் பெண் ஒருவர்நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து நாக்கு அறுக்கப்பட்டு முதுகெலும்பு முறிக்கப்பட்டு இறந்து போன சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் என்ற சிறிய மாவட்டம் உள்ளது. இங்குள்ள கிராமங்களில் ஒன்றுதான் சண்ட்பா .இந்த கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பெண் அங்கு உள்ள விவசாய நிலத்தில் புல் அறுத்து கொண்டிருந்திருக்கிறார்.

அப்பொழுது அந்தப் பகுதிக்கு வந்த 4 பேர் அந்தப் பெண்ணை பலவந்தமாக தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். நாலு பேருமே உயர் சாதியை சேர்ந்தவர்களாம்.

 

கூட்டு பாலியல் செய்துவிட்டு உண்மையை சொல்ல கூடாது என்று இரக்கமின்றி நாக்கையே அறுத்துள்ளனர். மேலும் எலும்புகள் நொறுங்கிப் போகும் அளவிற்கு அடித்துள்ளனர்.

அந்த வழியாக சென்ற கிராமவாசிகள் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் பெண்ணை கண்டு, பெற்றோருக்கு தகவல் தெரிவித்து மருத்துவமனையிலும் சேர்த்தனர். சம்பந்தப்பட்ட 4 பேர் மீதும் போலீசில் புகார் தரப்பட்டது.. அப்புகாரின் பேரில் அவர்கள் கைதாகி உள்ளனர்.

 

மேலும் அந்த பெண்ணின் உடலை தகனம் செய்வதற்கு போலீசார் மறுத்துள்ளனர்.அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் காலில் விழுந்து கெஞ்சியும் தகனம் செய்ய அனுமதிக்காத போலீசார் அந்த உடலை தகனம் செய்து உள்ளனர்.

பெண்ணின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் முன்பாக, அவரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தார் நின்று, தங்கள் வீட்டுக்கு உடலை கொண்டு செல்லுங்கள் என கதறியுள்ளனர். ஆனால் போலீஸ் இதற்கு சம்மதிக்காமல் பெற்றோரை இறுதி சடங்கிற்கு அனுமதிக்காமல் ஊருக்கு வெளியே கொண்டு சென்று உடலை எரித்துள்ளனர்.

 

இறப்பதற்கு முன்பு அந்த பெண் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர் .

 

 

author avatar
Kowsalya