இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை! இன்றைய ராசி பலன் 12-12-2020 Today Rasi Palan 12-12-2020

0
57

 

இன்றைய ராசி பலன்- 12-12-2020

நாள் : 12-12-2020

தமிழ் மாதம்: 

 கார்த்திகை 27, சனிக்கிழமை,

 சுப ஹோரைகள் 

காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

இராகு காலம்: 

காலை 9.00 முதல் 10.30 வரை

எம கண்டம்: 

மதியம் 1.30 முதல் 3.00 வரை

குளிகன்: 

 காலை 6.00 முதல் 7.30 வரை 

திதி: 

 துவாதசி திதி காலை 07.02 வரை பின்பு திரியோதசி திதி பின்இரவு 03.53 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி.

நட்சத்திரம்: 

சுவாதி நட்சத்திரம் காலை 06.30 விசாகம் நட்சத்திரம் பின்இரவு 04.04 வரை பின்பு அனுஷம்.

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சனிப் பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது.

 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் நற்பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். கடன் பிரச்சினைகள் சற்று குறையும்.

 

ரிஷபம்

 

ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தயோகஸ்தர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

 

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மனைவி வழியில் நல்லது நடக்கும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.

 

கடகம்

 

கடக ராசிக்காரர்களே குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தொழிலில் சற்று மந்த நிலை காணப்படும். அரசு வழி எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று தாமதநிலை ஏற்படும். வேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் கிட்டும்.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களே நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி கிட்டும். பிள்ளைகள் தம் பொறுப்பு அறிந்து செயல்படுவர். உடன்பிறந்தவர்களால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.

 

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களே உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் சற்று கவனம் செலுத்துவது நல்லது. குடும்ப உறவுகளுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். பொருளாதார நிலை மந்தமாக இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.

 

துலாம்

 

துலா ராசிக்காரர்களே நீங்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்காரர்களே நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணத்தால் நற்பலன்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களே நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வங்கி சேமிப்பு உயரும்.

 

மகரம்

 

மகர ராசிக்காரர்களே உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உங்கள் பிரச்சினைகள் தீர உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிட்டும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

 

கும்பம்

 

கும்ப ராசிக்காரர்களே உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

 

மீனம்

 

மீன‌ ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி பெரிய தொகையை கடனாக கொடுப்பதையோ அல்லது வாங்குவதையோ தவிர்ப்பது உத்தமம். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

author avatar
Kowsalya