முடிவுக்கு வரும் ஊரடங்கு! நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் இன்று ஆலோசனை!

0
48

சென்ற வருடம் மார்ச் மாதம் நோய் தொற்று பாதிப்பு காரணமாக, நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தனர். ஆனால் ஊரடங்கு முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்படவில்லை.

ஒவ்வொரு மாநிலங்களும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நவம்பர் மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. நாளையுடன் இந்த ஊரடங்கு முடிவுக்கு வருவதன் காரணமாக, என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை செய்ய இருக்கிறார்.

தற்சமயம் ஒமிக்ரான் என்ற உருமாற்றம் பெற்ற நோய்த்தொற்று பயமுறுத்தி வருவதன் காரணமாக, ஊரடங்கு நீட்டிப்பு உடன் நோய்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளில் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.