இந்தியா தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி! தென்னாப்பிரிக்கா வருத்தம்!

0
124

தென்னாபிரிக்கா சென்று இருக்கின்ற இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. சிவப்பு பந்துகளை பயன்படுத்தும் கிறிஸ்து விளையாட்டுப்போட்டிகள் செஞ்சூரியன், கேப்டவுன் மற்றும் ஜோகானஸ்பேர்க் நகரில் நடைபெற இருக்கின்றன. இந்த இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகின்ற 26ம் தேதி செஞ்சூரியனில் நடைபெற இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகரித்து வரும் நோய் தொற்று காரணமாக, கிரிக்கெட்டின் மிக தீவிர ரசிகர்கள் மற்றும் அனைத்து விளையாட்டு போட்டி பிரியர்களுக்கும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் வருத்தத்துடன் இதனை தெரிவித்துக் கொள்கிறது. உள்நாட்டில் நோய்த்தொற்று நான்காவது அலையை கருத்தில் வைத்து 2 நாட்டு கிரிக்கெட் சங்கங்களும் ஒரு கூட்டு முடிவை எடுத்திருக்கிறது.

அதாவது இந்தியாவுக்கு எதிரான போட்டிகளுக்கு டிக்கெட்டுகளை வழங்காமல் வீரர்களையும், இந்த சுற்றுப்பயணத்தையும், பாதுகாக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நோய்தொற்று பரவலை கருத்தில் வைத்து இந்த சுற்றுப்பயணத்தில் எந்த விதமான விதிமீறல்கள், சமரசம் உள்ளிட்டவற்றை தவிர்க்கும் பொருட்டும், ஆபத்தில்லாத சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இரண்டு நாடுகளுக்கு இடையேயான போட்டிகள் சூப்பர் ஸ்போர்ட்ஸ் மற்றும் எஸ் ஏ பி சி தலங்களில் ஒளிபரப்பப்படும் என்பதை அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நினைவூட்ட விரும்புகிறோம் என கூறப்பட்டுள்ளது.

இதைத் தவிர பொது இடங்களில் போட்டி ஒளிபரப்புகள் உள்ளிட்ட மாற்று செயல்பாடுகளையும், தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் ஆராய்ந்து வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.