தோனி மீது சர்ச்சை எழுப்பிய வீரர்?

0
57

சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து விதமான ICC (உலகக்கோப்பை 50/50, 20/20, சாம்பியன் ட்ரொபி) வென்ற ஒரே கேப்டன் நம்ம தல தோனி.இவரை பற்றி ரசிகர்கள் மட்டும் அல்லாமல் இவருடன் அணியில் விளையாடிய சக வீரர்கள் அவரின் களத்தில் அவரின் கேப்டன் ஷிப் பற்றி புகழ்ந்து தள்ளி உள்ளனர். ஆனால் அவரை பற்றி சக வீரர் குற்றம் சாற்றியுள்ளார் அவர்தான் தற்போது வரை ஆடிவரும் இஷாந்த் சர்மா.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இஷாந்த் சர்மா, தோனி கேப்டனாக இருந்த காலத்தில் தங்களுக்கு போதுமான விளையாட்டு அனுபவம் கிடைக்கவில்லை என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் அணியில் 6 முதல் 7 வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததால், அவர்களை சுழற்சி முறையில் தோனி பயன்படுத்துவார் என்று தெரிவித்தார். அதனால் பந்துவீச்சாளர்களிடையே போதுமான புரிதலும், ஒருங்கிணைப்பும் இல்லாமல் இருந்ததாக இஷாந்த் சர்மா குற்றஞ்சாட்டியுள்ளார். 

தொடர்ந்து பேசிய இஷாந்த் சர்மா, தற்போது கோலியின் தலைமையில் பந்துவீச்சாளர்கள் இடையே தற்போது 3 முதல் 4 பத்துவீச்சாளர்கள் மட்டுமே பயன்டுத்தப்படுவதால் அவர்களிடையே நல்ல ஒருங்கிணைப்பும் புரிதலும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் குறைவான பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருப்பதால் அவர்களுக்கு அதிக அனுபவமும் அதிக போட்டிகளில் விளையாடும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் கூறினார்.

மேலும் தோனி கேப்டனாக இருந்த காலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளார். 

இந்திய அணியை பொறுத்தவரை, அதிகபட்சமாக கபில் தேவ் 131 டெஸ்ட் போட்டிகளிலும் அதற்கடுத்ததாக ஜாகீர் கான் 93 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளனர்.

96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இஷாந்த் சர்மா இன்னும் 4 போட்டிகளில் விளையாடினால் 100 போட்டிகளில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெருவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
CineDesk