50 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசிக்கு பதிவு

0
60

50 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசிக்கு பதிவு

சுமார் 50 லட்சம்பேர் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு கோ-வின் இணையதளத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி சமீபத்தில் தொடங்கியது. இதற்காக கோ-வின் இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்யும் வசதியை மத்திய அரசு தொடங்கியது.

அந்த இணையதளத்தில் இதுவரை சுமார் 50 லட்சம்பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இதேபோல், இந்த பிரிவினரில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 791 பேருக்கு இதுவரை முதல் ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.