இன்று விசாரணைக்கு வரும் முக்கிய வழக்கு! தப்புமா எதிர்க்கட்சித் தலைவரின் தலை?

0
100

அதிமுகவின் ஆட்சிக்காலத்தின் போது நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழல் புகாரை சிபிஐ விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்வதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4800 கோடி ஊழல் நடைபெற்றதாகவும், இது தொடர்பாக கடந்த 2018 ஆம் வருடம் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி வழக்கு ஒன்றை தொடுத்தார்.

இந்த வழக்கு குறித்து 2018 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 9ம் தேதி முக்கிய தீர்ப்பை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

அந்த தீர்ப்பை எதிர்த்து தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என் .வி ரமணா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு பட்டியக்கிடப்படப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்த வழக்கு கடந்த 2018 ஆம் வருடம் அக்டோபர் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆனால் அந்த சமயத்தில் ஆர் எஸ் பாரதியின் தரப்புக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதோடு அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி மீதான சிபிஐ விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.