பிரபலமான திரையரங்குகளுக்கு சீல் வைப்பு! மாநகராட்சி நிர்வாகம் அதிரடி

0
85

பிரபலமான திரையரங்குகளுக்கு சீல் வைப்பு! மாநகராட்சி நிர்வாகம் அதிரடி

கேளிக்கை வரி செலுத்தாத காரணத்தால் சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஐந்து திரையரங்குகளுக்கு சேலம் மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பிரபல தனியார் நிறுவனத்தின் ஐந்து திரையரங்குகள் கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கு செயல்பட்டு வருகிறது.  கடந்த ஓராண்டு காலமாக ரசிகர்களிடம் இருந்து பெறப்பட்ட கட்டணத் தொகையில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய 30% கேளிக்கை வரியை இந்த  திரையரங்க நிர்வாகமானது  செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது.

 இந்த நிலையில் இன்று சேலம் மாநகராட்சி நிர்வாகம் கேளிக்கை வரி 30 லட்சம் ரூபாய் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறி தனியார் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் நிறுவனத்திற்கு சீல் வைத்தனர்.

தொடர்ந்து ஒரே நாளில் ஐந்து திரையரங்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சீல் வைக்கப்பட்ட சம்பவம் திரையரங்கு உரிமையாளா்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மட்டுமின்றி சேலம் வந்து செல்லும் வெளியூர் பயணிகளின் முக்கிய பொழுதுபோக்காக விளங்கிய இந்த திரையரங்கிற்கு சீல் வைக்கப்பட்டதால் படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இது தொடா்பாக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கூறுகையில், “மாநகராட்சி தரப்பில் திரையரங்க நிா்வாகத்திற்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், திரையரங்க நிா்வாகம் இதனை கவனத்தில் கொள்ளாததால் ஐந்து திரையரங்குகளுக்கு  இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது”என தெரிவித்தது.

author avatar
Parthipan K