6 மாதங்களுக்கு முன்னே கொரோனாவை கணித்து கூறிய அதிசய சிறுவன்.! வியக்கவைக்கும் அதிரடி வீடியோ..!!

0
106

6 மாதங்களுக்கு முன்னே கொரோனாவை கணித்து கூறிய அதிசய சிறுவன்.! வியக்கவைக்கும் அதிரடி வீடியோ..!!

கொரோனா பாதிப்பை ஆறு மாதத்திற்கு முன்பே ஒரு சிறுவன் கணித்துக் கூறிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுக்க பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி தனது யு டியூப் மூலமாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஆபத்து இருப்பதை கூறியுள்ளார். எதிர்கால பாதிப்பை கணித்துக் கூறும் சிறுவன் அபிக்யா தன்னை ஒரு ஜோசியர் என்று கூறிக்கொள்கிறார்.

சிறுவன் வீடியோவில் கொரோனா பற்றி முன்பே கணித்து கூறியதாவது; வருங்காலத்தில் பெரும் ஆபத்து வருவதாகவும் இதில், சீனா அதிகளவு பாதிக்கும் என்றும் விமானத்துறை அதிகம் இழப்பை சந்திக்கும் என்று கூறியுள்ளார். நாம் அனைவரும் இணைந்து போராட வேண்டும் அப்போதுதான் இதில் இருந்து நம்மாள் மீள முடியும் என்றும் தனது யு டியூப் வீடியோவில் முன்பே கணித்து கூறியுள்ளார்.

கடந்த 2019 ஆண்டில் இருந்து 2020 ஆம் ஆண்டுக்குள் உலகையே அச்சுறுத்தும் ஆபத்து உருவாகும் என்று பேசியுள்ளார். எண்ணெய் வளங்கள் நிறைந்த பகுதிகள் அதிகம் பாதிக்கும் என்று கூறிய சிறுவனின் பேச்சு, ஈரான், ஈராக், சவுதி அரேபியா போன்ற நாடுகள் அழிவைச் சந்திக்கும் என எடுத்துக் கொள்ளலாம். எனினும் இதுவரை அந்த பகுதிகளில் அதிகளவு பாதிப்பு ஏற்படவில்லை. இனி நடக்க வாய்ப்புண்டு என்று கூறலாம் ஆனால் உறுதியாக சொல்ல முடியாது.

https://bit.ly/2wKaCNW (சிறுவனின் கணிப்பு வீடியோ)

போக்குவரத்து பாதிக்கும் என்று சிறுவன் கூறியது அப்படியே சொன்னதைப்போலவே நடந்துள்ளது. சிறுவனின் கணிப்பு ஓரளவு சரி என்றாலும் முழுமையாக ஏற்கமுடியாத கருத்தாகவே பார்க்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் கொரோனா பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாத அளவில் இருக்கிறது. தற்போது சிறுவன் அபிக்யா கணித்து கூறிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

author avatar
Jayachandiran